உங்க இஷ்டத்துக்கு பிட்ச் தயாரிக்காதீங்க.. பிசிசிஐ’யை அடக்கிய ஐசிசி.. 2023 உ.கோ பிட்ச் தயாரிப்பு பற்றி 3 ரூல்ஸ் வெளியீடு

World Cup Chepauk
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் கோலாகலமாக துவங்கி அகமதாபாத், சென்னை, மும்பை போன்ற பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறும் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.

அதில் எதிரணிகளை வீழ்த்தி சொந்த மண்ணில் 2011 போல ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக பொதுவாகவே இந்தியாவில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த அம்சமாகும். இருப்பினும் சமீப காலங்களாகவே இந்தியா வெல்வதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்து வருவதாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சமீபத்திய டெஸ்ட் தொடர்களின் போது கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

ஐசிசி கட்டுப்பாடு:
அதற்கேற்றாபோல் கடந்த சில வருடங்களாகவே இந்திய மண்ணில் நடைபெறும் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் 3 நாட்களுக்குள் முடிந்து விடுவது இந்திய ரசிகர்களுக்கே ஏமாற்றமாக அமைந்து வருகிறது. இந்த நிலைமையில் இந்த உலகக் கோப்பை போட்டிகள் நடுநிலைமையுடன் நடைபெறுவதற்காக மைதானங்கள் தயாரிப்பு பற்றிய விஷயங்களில் ஐசிசி சில கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

1. அதில் முதலாவதாக வேகம் மற்றும் சுழல் ஆகிய இரண்டுக்குமே சாதகமாக பிட்ச் இருக்கும் வகையில் தயாரிக்குமாறு பிசிசிஐ தலைமையில் இயங்கும் இந்திய மைதானங்களின் பராமரிப்பாளர்களுக்கு ஐசிசி கட்டுப்பாடு விதித்துள்ளதாக செய்திகள் கூறுகிறது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பிட்ச்சில் லேசான பச்சை புற்களை விடுமாறு மைதானம் பராமரிப்பாளர்களிடம் ஐசிசி கேட்டு கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

- Advertisement -

2. இது மட்டுமல்லாமல் பொதுவாகவே இந்தியாவில் பகலிரவு போட்டிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிகள் அதிக சாதகத்தை சந்தித்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இதை தடுப்பதற்காகவே சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கக் கூடாது என்று ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக டாஸ் என்பது வெற்றில் பெரிய பங்காற்ற கூடாது என்பதால் பிட்ச்சில் லேசான புற்களை விடுமாறு மைதான பராமரிப்பாளர்களுக்கு ஐசிசி கண்டிப்பான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதையும் படிங்க: 12 டக் அவுட்.. 83 எக்ஸ்ட்ராஸ்.. ஏசியன் கேம்ஸ் தொடரில் ஒரே அணிக்கு 2 முறை நிகழ்ந்த பரிதாப வினோதம்

3. அதைத்தொடர்ந்து ரசிகர்களை மகிழ்விப்பதற்காக சமீப காலங்களாகவே மைதானத்தின் பவுண்டரி அளவுகள் 55, 60, 65 மீட்டர் அளவுக்கு மிகவும் சிறியதாக இருக்கின்றன. அதை தடுக்கும் முனைப்புடன் அனைத்து மைதானங்களிலும் பவுண்டரி அளவு குறைந்தபட்சம் 70 மீட்டர் இருக்க வேண்டும் என்று பிசிசிஐ மற்றும் மைதான பராமரிப்பாளர்களுக்கு ஐசிசி உத்தரவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Advertisement