உலககோப்பை 2023 : இன்னும் 50 நாட்கள் தான் இருக்கு.. 10 அணிகளுக்கும் கெடு விதித்த ஐ.சி.சி – சீக்கிரம் முடிவு பண்ணி சொல்லுங்க

ICC
- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அடுத்து தற்போது 2023-ஆம் ஆண்டு முற்றிலுமாக 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதோடு ஒவ்வொரு நாளும் இந்த உலகக்கோப்பை தொடர் குறித்த முக்கிய செய்திகள் வெளியாகி வருகின்றன.

Worldcup

- Advertisement -

அந்தவகையில் இன்னும் இந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது துவங்க 50 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளுக்கும் எச்சரிக்கை அளிக்கும் விதமாக முக்கிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களை தற்போது 10 நாடுகளைச் சேர்ந்த அணிகளும் தயார்படுத்தி வருகின்றன. இவ்வேளையில் தற்போது இந்த உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ளது.

Rohit Kuldeep Yadav Virat Kohli KL Rahul India

எனவே விரைவில் அனைத்து நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணியின் வீரர்களை தேர்வு செய்து அறிவிப்பார்கள் என்று தெரிகிறது. அதேபோன்று இந்திய அணியானது செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடரில் மட்டுமே பங்கேற்க உள்ளதால் அந்த இரண்டு தொடர்களை வைத்து மட்டுமே இந்திய அணி 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிடும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : அஸ்வினுக்கு நேர்ந்த பரிதாப நிலைமை இப்போ எனக்கு வந்துருக்கு – பிரிதிவி ஷா சோகமான பேட்டி, காரணம் என்ன?

அதோடு புதிய தேர்வுக்குழு தலைவராக இருக்கும் அஜித் அகார்கர் எப்படிப்பட்ட வீரர்களை தேர்வு செய்வார் என்ற ஆவலும் அதிகரித்துள்ளது. அதேபோன்று இந்தியாவை தவிர்த்து மற்ற ஒன்பது அணிகளும் தங்களது அணியை எவ்வாறு அறிவிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement