ஐ.பி.எல் 2024-ல் கம்பேக் கொடுக்க இருக்கும் ரிஷப் பண்டிற்கு வாழ்த்து தெரிவித்து – ஹர்ஷா போக்ளே பகிர்ந்த பதிவு

Harsha-and-Pant
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி ஓராண்டுக்கு மேலாக எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வருகிறார். இந்த விபத்து காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை முழுவதையும் அவர் தவற விட்டிருந்தார். இவ்வேளையில் படிப்படியாக தனது உடற்தகுதியில் முன்னேற்றம் கண்டு தற்போது பயிற்சி இணையும் மேற்கொண்டு வருகிறார்.

இவ்வேளையில் ரிஷப் பண்ட் அடுத்த ஆண்டு 2024-ல் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்க இருக்கிறார் என்ற தகவலை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இடதுகை அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் மகிழ்வித்தவர். அதோடு போட்டியில் எந்த நேரத்திலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியின் முடிவை மாற்றும் பலம் கொண்ட அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு திரும்ப இருப்பது அந்த அணிக்கும் பலத்தை சேர்க்கும்.

அந்த வகையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி : ஐபிஎல் 2024-ல் ரிஷப் பண்ட் நிச்சயம் விளையாடுவார் என்று அறிவித்துள்ளது. அதோடு அவர் விக்கெட் கீப்பராக விளையாடாமல் பேட்ஸ்மேனாக விளையாடினால் நிச்சயம் அவரே அணியை தலைமை தாங்குவார் என்றும் அறிவித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ரிஷப் பண்டின் கம்பேக் குறித்து பிரபல கிரிக்கெட் விமர்சகரான ஹர்ஷா போக்லே தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : ரிஷப் பண்ட் கம்பேக் கொடுக்கிறார் என்ற செய்தி எனக்கு ஒரு மகிழ்ச்சியை தந்துள்ளது. அவர் மீண்டும் களத்திற்கு திரும்பி விளையாட இருப்பதை பார்க்க காத்திருக்க முடியவில்லை. சீக்கிரம் அவர் விளையாட வர வேண்டும்.

இதையும் படிங்க : அவரோட கைகள கட்டவே முடியாது.. இந்த பையன் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவாரு.. கவாஸ்கர் நம்பிக்கை

இந்த தொடரை அவர் மகிழ்ச்சியாக விளையாடுவதோடு எஞ்சியுள்ள அவரது அற்புதமான கரியருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என அவர் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே வெளியான ஒரு சில செய்திகளில் ரிஷப் பண்ட் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே விளையாடுவார் என்றும் அதன் காரணமாக டேவிட் வார்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வழிநடத்த வாய்ப்பு உள்ளதாகவும் சில பதவிகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement