CSK : இலங்கை ரசிகர்களே. உங்களுக்காக இங்கே ஒரு வைரத்தை தோனி பட்டை தீட்டி கொண்டிருக்கிறார் – ஹர்ஷா போக்ளே

Bhogle
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் போட்டி நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. அதன்படி அந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 18.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் எழுந்து 138 எடுத்து.

- Advertisement -

இதன் காரணமாக சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணியில் விளையாடிய இளம் வேகப்பந்து வீச்சாளரான மதிஷா பதிரானா நான்கு ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

அவரது பந்துவீச்சு மிகச்சிறப்பாக அமைந்ததால் போட்டியின் வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் தல தோனியும் அவரது பந்துவீச்சு மலிங்காவை போன்று உள்ளதாகவும் அவரது இந்த வித்தியாசமான ஆக்சன் அவரை பெரிய அளவிற்கு கொண்டு செல்லும் என்றும் பெரிய அளவில் புகழ்ந்து பேசி இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் விமர்சகரான ஹர்ஷா போக்ளே தனது டிவிட்டர் பக்கத்தில் மதிஷா பதிரானாவை பாராட்டி சில கருத்துக்களையும் பதிவிட்டார். அதன்படி அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் :

இதையும் படிங்க : வீடியோ : அடுத்தடுத்த பந்துகளில் 2 மிடில் ஸ்டம்ப்பை உடைத்த அர்ஷ்தீப் – ரோகித், சூரியகுமாரை தாண்டி மும்பை வெற்றியை பறித்தது எப்படி

இலங்கை ரசிகர்களே உங்களுக்காக ஒரு வைரத்தை தோனி பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறார். அவர் நிச்சயம் இலங்கை அணிக்காக மாபெரும் செயல்பாடுகளை வெளிப்படுத்துவார் காத்திருங்கள் என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement