டெல்லி அணியிலிருந்து திடீரென வெளியேறிய நட்சத்திர வீரர்.. என்ன காரணம் தெரியுமா? – விவரம் இதோ

DC
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது வரும் மார்ச் மாதம் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்கும் சென்னை அணியும், டூப்ளிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும் மோத இருக்கின்றன. இந்த முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் இந்த ஐபிஎல் தொடரானது துவங்க 10 நாட்களுக்கும் குறைவாகவே உள்ள வேளையில் சில முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து சொந்த காரணங்களுக்காக வெளியேறி வருவது சம்மந்தப்பட்ட ஒரு சில அடிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே இங்கிலாந்து வீரரான ஜேசன் ராய் கொல்கத்தா அணியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து இன்று ஒரு இங்கிலாந்து வீரர் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து வெளியேறி உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்காக 13 கோடி 25 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஹாரி புரூக் 2024-ஆம் ஆண்டிற்கான நடைபெற்று முடிந்த மினி ஏலத்தில் நான்கு கோடி ரூபாய்க்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார்.

- Advertisement -

ஆனால் தற்போது இந்த ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் பத்து நாட்களே எஞ்சியுள்ள வேளையில் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய அவர் 190 ரன்களை மட்டுமே அடித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : காயம் காரணமாக 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரினை தவறவிட்ட 3 இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

அதனைத்தொடர்ந்து டெல்லி அணியால் வாங்கப்பட்ட அவர் தற்போது டெல்லியில் அணியில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் வெளியேறி இருந்தாலும் அவருக்கான மாற்றுவீரரை இன்னும் டெல்லி அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை விரைவில் அவருக்கான மாற்றுவீரரை தேர்வு செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement