வீடியோ : என்னையா கலாய்ச்சீங்க, அதிரடியாக விளையாடி ஹைதராபாத் அணிக்காக தனித்துவ சாதனை படைத்த ஹரி ப்ரூக்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி உலகப் புகழ் பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 19வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு இளம் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் இம்முறை தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடினார். அவருடன் 46 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் மறுபுறம் தடுமாற்றமாக செயல்பட்ட மயங் அகர்வாலை 9 (13) ரன்களில் அவுட்டாக்கிய ஆண்ட்ரே ரசல் அடுத்து வந்த ராகுல் திரிபாதியையும் 9 (4) ரன்களில் காலி செய்தார்.

இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். அதே வேகத்தில் 3வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 50 (26) ரன்கள் குவித்த அவர் வருண் சக்கரவர்த்தி சுழலில் ஆட்டமிழந்தார். அவரைப் போலவே மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட ஹாரி ப்ரூக் ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

அவருடன் அடுத்து களமிறங்கிய அபிஷேக் சர்மா தனது பங்கிற்கு கடைசி நேரத்தில் அதிரடியாக செயல்பட்டு 4வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஹைதராபாத்தை 200 ரன்கள் கடக்க வைத்து 3 பவுண்டரி 2 சிக்சருடன் 32 (17) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக விளையாடிய ஹரி ப்ரூக் 12 பவுண்டரி 3 சிக்சருடன் ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் சதமடித்து 100* (55) ரன்கள் விளாசினார். குறிப்பாக ஹைதராபாத் அணிக்காக வெளியூரில் சதமடித்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையும் அவர் படைத்துள்ளார்.

அதாவது ஹைதராபாத் நகரில் இருக்கும் ராஜீவ் காந்தி மைதானம் அந்த அணியின் சொந்த மைதானமாக பார்க்கப்படுகிறது. அந்த மைதானத்தில் தான் இதற்கு முன் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் ஹைதராபாத் அணிக்காக சதமடித்திருந்தனர். அந்த நிலையில் ஹரி ப்ரூக் தான் முதல் முறையாக ஹைதராபாத் நகருக்கு வெளியே அந்த அணிக்காக சதமடித்து அசத்தியுள்ளார். அவருடன் கடைசி நேரத்தில் ஹென்றிச் க்ளாஸென் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 16* (6) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் ஹைதராபாத் 228/4 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

முன்னதாக 2022 அண்டர்-19 உலக கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வீரர் ஹரி ப்ரூக் கடந்த வருடம் பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரிலும் டெஸ்ட் தொடரிலும் அதிரடியாக செயல்பட்டு இங்கிலாந்தின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். அதே போல் பிஎஸ்எல் தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்ற லாகூர் அணியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவதால் விராட் கோலியை போல் வரும் காலங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவார் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பாராட்டியிருந்தார்.

அதனாலேயே ஹைதராபாத் அணியில் பெரிய கோடிகளுக்கு வாங்கப்பட்ட அவர் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. ஆனால் இந்த தொடரில் முதல் 3 போட்டிகளிலும் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாத அவர் சொற்ப ரன்களில் தடுமாறி அவுட்டானார்.

இதையும் படிங்க: என்சிஏ சிஸ்டத்தில் ஏதோ தப்பு நடக்குது, அவருக்கு என்னாச்சுன்னு ஓப்பனா ரசிகர்களுக்கு சொல்லுங்க – லக்ஷ்மனை கைஃப் கோரிக்கை

அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் எடுத்த எடுப்பிலேயே அதிரடி காட்டுவதற்கு இது ஒன்றும் பாகிஸ்தானில் இருக்கும் தார் ரோட் பிட்ச் கொண்ட தொடர் கிடையாது என்று அவரை கலாய்த்தனர். இருப்பினும் இந்த போட்டியில் சற்று பேட்டிங்க்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக சதமடித்த அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement