GT vs MI : நாங்க தோத்திருந்தாலும் அவரோட ஆட்டம் பிரமாதமாக இருந்தது. தோல்விக்கு பிறகு – ஹார்டிக் பாண்டியா பேட்டி

Hardik Pandya
- Advertisement -

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 57-வது ஐபிஎல் லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. அதுமட்டுமின்றி புள்ளி பட்டியலிலும் 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

MI vs GT

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக சூரியகுமார் யாதவ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் குவித்தார்.

பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே குவித்ததால் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசியிருந்த குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் :

Rashid Khan

எங்கள் அணி சார்பாக ரஷீத் கான் மட்டுமே மிகச் சிறப்பாக ஆடினார். அவர் பேட்டிங் செய்த விதமும், பவுலிங் செய்த விதமும் மிகவும் அற்புதமாக இருந்தது. அவரை தவிர்த்து நாங்கள் எங்களுடைய சிறப்பான செயல்பாட்டை இன்று வெளிப்படுத்த தவறிவிட்டோம். ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் இல்லை என்று கூற வேண்டும். ஏனெனில் எங்களுடைய திட்டங்களில் தெளிவு இல்லை.

- Advertisement -

அதோடு அதனை நாங்கள் சரியாகவும் பயன்படுத்தவில்லை. இந்த மைதானத்தில் நாங்கள் 25 ரன்கள் வரை கூடுதலாக கொடுத்து விட்டதாக நினைக்கிறேன். சூரியகுமார் யாதவ் பேட்டிங் பற்றி சொல்ல வார்த்தைகள் போதாது. தற்போதைய டி20 கிரிக்கெட்டில் அவருக்கு எதிரான திட்டங்கள் தவறி போனால் அவர் எப்படி பேட்டிங் செய்வார் என்பதை இந்த போட்டியின் மூலமே அறிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க : வீடியோ : பால் வல்தாட்டி, கில்கிறிஸ்ட் சாதனை சமன் – ஐபிஎல் வரலாற்றில் 2 மாஸ் சாதனையுடன் உலக சாதனை படைத்த ரசித் கான்

இந்த போட்டியில் எங்களுடைய திட்டங்கள் தவறியதாலே தோல்வி கிடைத்தது. ஆனால் இதிலிருந்து நிச்சயம் நாங்கள் மீண்டு வருவோம் என்றும் இந்த போட்டியில் எங்களது அணி வீரர்களில் ரஷீத் கானின் ஆட்டம் மட்டுமே பிரமாதமாக இருந்ததாக ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement