அடிக்கவேண்டிய ஸ்கோர் தான்.. ஆனா தோனி இருக்காரே அவரு எல்லாத்தையும் மாத்திடுறாரு.. பாண்டியா பேட்டி

Pandya
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது சென்னை அணியிடம் 20 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 69 ரன்களையும், சிவம் துபே 66 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே குவித்ததால் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியானது தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : இந்த இலக்கு எட்டக்கூடிய ஒன்றுதான். ஆனால் சென்னையின் வீரர்கள் மிகச்சிறப்பாக பந்துவீசினார்கள். குறிப்பாக பதிரானா மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டார்.

- Advertisement -

அவர்களுடைய திட்டமும் செயல்பாடும் சிறப்பாக இருந்தது. அதோடு ஸ்டம்பிற்கு பின்னால் நின்று தோனி கொடுக்கும் ஆலோசனைகள் அனைத்தும் அவர்களுக்கு சிறப்பாக உதவுகிறது. இந்த மைதானத்தில் பந்து சற்று நின்று வந்ததால் பேட்டிங்கில் சிறிய சிரமம் ஏற்பட்டது. அதோடு இதுபோன்ற சேசிங்கில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட வேண்டும்.

இதையும் படிங்க : தோனி பண்ண அந்த சம்பவம் தான் வெற்றிக்கு உதவியது.. மும்பை சாய்த்த பின்னர் – ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி

அதோடு ரன் குவிப்பில் தொடர்ந்து இன்டென்ட் இருந்து கொண்டே இருக்க வேண்டும். பதிரானா வந்து அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய போது போட்டியில் சற்று மாற்றம் ஏற்பட்டது என ஹார்டிக் பாண்டியா தோல்வி குறித்து கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement