ஆறு மாதம் நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும் – இந்திய வீரர் புலம்பல்

Pandya-1
- Advertisement -

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டராக இருப்பவர் ஹர்திக் பாண்டியா. கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இந்திய அணிக்காக ஆடி வருகிறார். முதுகுப்பட்குதியில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பிறகு 6 மாதம் இவரால் கிரிக்கெட் ஆட முடியவில்லை.

Pandya

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற டி.ஒய்.பட்டீல் டி20 கிரிக்கெட் தொடரில் ரிலைன்ஸ் அணிக்காக களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா 37 பந்தில் சதம் விளாசினார். அதனை தொடர்ந்து அதே அணிக்காக அரையிறுதிப் போட்டியில் களமிறங்கி 55 பந்துகளில் 158 ரன்கள் குவித்தார் .இதில் 20 சிக்சர்கள் அடங்கும்.

இவ்வாறு அபாரமாக ஆடியதால் மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்தது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா யுஜவேந்திர சாஹல்-உடன் பேசும் வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் பேசிய ஆர்டிக் பாண்டியா கூறியதாவது :

Practice

நான் இந்த ஆறு மாதகாலத்தில் இந்திய அணி வீரர்களுடன் இருக்கும் சூழலை மிகவும் மிஸ் செய்தேன். இந்திய அணி உடை அணிந்து நாட்டிற்காக ஆடாதது சற்று வருத்தம் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா.

- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று போட்டி மழை காரணமாக போட்டி ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

Pandya-1

மேலும் தற்போது மீண்டும் அணியில் இடம் பிடித்திருக்கும் பாண்டியா தனது திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று அவர் விளையாடாமல் போனது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement