ரோஹித்துக்கு டாட்டா காட்டிய மும்பை.. பாண்டியாவை வைத்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பால்.. ரசிகர்கள் ஏமாற்றம்

Hardik Pandya MI
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக செயல்பட்டு வந்த நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் டிரேடிங் முறையில் வலுக்கட்டாயமாக வாங்கியது சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

கடந்த 2015இல் தம்முடைய ஐபிஎல் பயணத்தை மும்பையில் துவங்கிய ஹர்திக் பாண்டியா 2020 வரை 4 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக இந்தியாவுக்காக அறிமுகமாகி முதன்மை வீரராக உருவெடுத்த அவரை 2021இல் ஃபார்மை இழந்து தடுமாறிய போது மும்பை கழற்றி விட்ட நிலையில் குஜராத் 15 கோடிக்கு வாங்கி தங்களின் கேப்டனாக நியமித்தது.

- Advertisement -

புதிய அறிவிப்பு:
அந்த வாய்ப்பில் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்ற பாண்டியா 2வது வருடத்தில் ஃபைனல் வரை குஜராத்தை அழைத்துச் சென்று இந்தியாவின் அடுத்த கேப்டனாகும் அளவுக்கு முன்னேறியுள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா இருக்கும் போது பாண்டியாவை மும்பை வலுக்கட்டாயமாக வாங்கியது ஏன்? என்ற குழப்பம் ரசிகர்களிடம் காணப்பட்டது.

இந்நிலையில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவுக்கு பதிலாக 2024 சீசன் முதல் ஹர்திக் பாண்டியா தங்களுடைய புதிய கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனால் 2013இல் கேப்டனாக பொறுப்பேற்று 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் 5 கோப்பைகளை வென்று மும்பையை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க வைத்த ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பயணம் முடிவுக்கு வந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

ஏனெனில் ஒரு கட்டத்தில் தோனியையே மிஞ்சி அசால்டாக 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா வரலாற்றின் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் 2022, 2023 ஆகிய சீசன்களில் ரோகித் தலைமையில் மும்பை படுமோசமான தோல்விகளை சந்தித்தது. மேலும் சமீபத்திய வருடங்களில் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டாகி ரோகித் சர்மா மோசமான சாதனை படைத்து சுமாராக செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க: ரோஹித்துக்கு டாட்டா காட்டிய மும்பை.. பாண்டியாவை வைத்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பால்.. ரசிகர்கள் ஏமாற்றம்

அதனால் தொலைநோக்கு பார்வையுடன் வருங்காலத்தை கருத்தில் கொண்டு பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது தலைமையில் ரோகித் விளையாடுவார் என்றும் மும்பை கூறியுள்ளது. ஆனாலும் 5 கோப்பைகளை வென்று கொடுத்து விராட் கோலி (4994) தோனிக்கு (4660) பின் அதிக ரன்கள் அடித்த கேப்டனாக சாதனை படைத்த ரோகித் சர்மாவுக்கு இப்படி டாட்டா காட்டி பாண்டியாவை புதிய கேப்டனாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது மும்பை ரசிகர்களிடமே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement