ரோஹித் சர்மாவின் பேச்சை கேட்டு செயல்பட்ட வீரரை அணியில் இருந்து நீக்கிய பாண்டியா – இதெல்லாம் ரொம்ப மோசம்

Madhwal
- Advertisement -

நடப்பு 17-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹார்டிக் பாண்டியா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளத்தில் நடைபெற்று வருகின்றன. மேலும் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாகவும் பாண்டியாவிற்கு எதிராகவும் ரசிகர்கள் மைதானத்தில் கோஷமிட்டு வருவது மும்பை அணியை பெரிய அளவில் பாதித்துள்ளது.

அந்த வகையில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த தொடரில் வெறும் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்று 6 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. எப்பொழுதுமே மெதுவான துவக்கத்தை பெற்று பிறகு பிளேஆப் சுற்றிற்க்குள் நுழைந்து கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்படும் மும்பை அணி நிச்சயம் இந்த சரிவிலிருந்து மீண்டு வந்து பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இவ்வேளையில் ஒவ்வொரு நாளும் பாண்டியா செய்யும் சில வேலைகள் குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை எழுப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் மத்வாலை வேண்டுமென்றே ஹர்திக் பாண்டியா புறக்கணித்து வருவது குறித்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை எழுப்பியுள்ளது.

ஏனெனில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரின் போது வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்கிற நிலையில் ஹர்திக் பாண்டியா கொடுக்கும் அட்வைஸை கேட்காமல் ரோகித் சர்மா என்ன சொல்கிறார்? என்று அவரிடம் போய் நின்று கேட்ட ஆகாஷ் மதுவால் அந்த ஓவரின் முதல் பந்தியிலேயே மும்பை அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

- Advertisement -

இருப்பினும் ஹார்டிக் பாண்டியா சொல்வதை கேட்காமல் ரோகித் சர்மா சொன்னபடியே அவர் பீல்டர்களை நிறுத்தி இருந்தார். இதன் காரணமாக அதிருப்தி அடைந்த பாண்டியா அந்த வெற்றிக்கு பின்னர் கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டியிலுமே ஆகாஷ் மத்வாலுக்கு இடம் வழங்காமல் இருந்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : வெறும் 4 ரன்ஸ்.. போராடியாக ரசித், சாய் கிஷோர், மில்லர்.. சூப்பர்மேன் ஃபீல்டிங்கால் நூலிலையில் கைமாறிய வெற்றி

இதனை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள் ரோகித் விசுவாசியாக இருப்பதினால் ஆகாஷ் மத்வாலுக்கு ஹார்டிக் பாண்டியா சரியான வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் ஆகாஷ் மத்வால் போன்ற வீரர் பும்ராவுடன் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement