இத்தனை வருட கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரராக வரலாற்று சாதனையை நிகழ்த்திய பாண்டியா – விவரம் இதோ

Pandya-5
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது.

INDvsAUS Toss

- Advertisement -

அதிகபட்சமாக துவக்க வீரர் பின்ச் 114 ரன்களையும், ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்னர் 69 ரன்களை குவித்தனர், இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

இந்திய அணி சார்பாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 76 பந்துகளில் 90 ரன்களையும், ஷிகர் தவான் 74 ரன்களும் குவித்தனர். மற்ற யாரும் 30 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஜாம்பா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

pandya

இந்த போட்டியில் 76 பந்துகளை சந்தித்து 90 ரன்களை குவித்த இந்திய அணியின் அதிரடி வீரர் ஹார்டிக் பாண்டியா புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதன்படி அந்த சாதனை யாதெனில் 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு அணிக்கு அறிமுகமான பாண்டியா நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி வரை 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1047 ரன்களை குவித்துள்ளார்.

Pandya-4

இதில் அவர் அடித்த 1000 ரன்களை அடிக்க வெறும் 857 பந்துகளையே எடுத்துக்கொண்டார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 ரன்களை குவிக்க குறைந்த பந்துகளை எடுத்துக்கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடைத்தை பிடித்துள்ளார்.

Advertisement