- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுர்ஜித்துக்காக கண்கலங்கி தனது உணர்ச்சிகளை வார்த்தையாக தமிழில் பதிவிட்ட – ஹர்பஜன் சிங்

தற்போது தமிழகத்தை உலுக்கி வரும் ஒரு நிகழ்வு திருச்சி மாவட்டம் நடுக்காட்டு பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டதுதான். இரண்டு நாட்கள் கடந்து அந்த குழந்தையை தற்போது மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் : சுர்ஜித் குறித்து தனது மனக்குமுறலை வார்த்தைகளாக பகிர்ந்துள்ளார். ட்விட்டரில் அவர் குறிப்பிட்டதாவது :நானும் ஒரு குழந்தையின் தகப்பன் என்கிற அந்த வகையில் என்னால் சுஜித் பெற்றோரின் வலியை உணர முடிகிறது.

அந்த குழந்தை உயிர் பொழச்சி வரணும். உன் தாய்ப்பால் வீரம் இருக்கு நீ கண்டிப்பா வருவ நீ வந்தால் தான் தீபாவளி தங்கமே என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவிட்ட இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. “Pray For Surjith”

- Advertisement -
Published by