உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாட வேண்டும் – ஹர்பஜன் சிங் கருத்து

Harbhajan-Singh
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செப்டம்பர் 27-ஆம் தேதி நாளை ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் அனைவரும் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் இணைவதால் நாளைய போட்டி அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இந்த தொடரின் போது முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடிய சூரியகுமார் யாதவ் முதல் போட்டியில் 50 ரனகளையும், இரண்டாவது போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 37 பந்துகளில் 72 ரன்களையும் குவித்து அசத்தினார். அவரது இந்த அதிரடியான ஆட்டம் பலரும் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.

இந்நிலையில் சூரியகுமார் யாதவ் உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

சூரியகுமார் யாதவ் என்னை பொறுத்தவரை உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும். அவருக்காக நாம் அணியிலிருந்து யாரை வேண்டுமென்றால் நீக்கலாம். ஏனெனில் சூரியகுமார் யாதவ் போன்ற ஒரு முழுமையான மேட்ச் வின்னர் அணிக்கு தேவை. அவரைப் போன்ற ஒரு வீரரால் நிச்சயம் போட்டியை தனி ஆளாக வெற்றி பெற வைக்க முடியும்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியா அடி வாங்கல.. நம்மல நல்லா யூஸ் பண்றாங்க.. அங்கயும் இந்தியாவை காப்பாத்துவோம் – ஸ்ரேயாஸ் ஐயர் வெளிப்படை

அவரை ஒரு ஃபினிஷராகவே பார்க்க அனைவரும் ஆசைப்படுகின்றனர். ஆனால் அவரைப் போன்ற ஒரு வீரர் ஐந்தாவது இடத்தில் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரிடம் உள்ள அதிரடி அத்தனை எளிதில் யாருக்கும் வந்து விடாது என்றும் ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement