கே.கே.ஆர் அணி இம்முறை ஐ.பி.எல் தொடரில் சந்தித்த தடுமாற்றத்திற்க்கு அவர்தான் காரணம் – ஹர்பஜன் குற்றச்சாட்டு

Harbhajan Singh
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வந்த நடப்பு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக கலந்து கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 12 லீக் ஆட்டங்களில் 5 வெற்றிகள் மற்றும் 6 தோல்விகள் என 11 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இன்னும் இந்த தொடரில் அந்த அணிக்கு இரண்டு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் அந்த அணியின் பிளே ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட பறிபோயுள்ளது.

கே.கே.ஆர் அணியின் தடுமாற்றத்திற்கு அவர்தான் காரணம் : ஹர்பஜன் சிங்

கடந்த ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியானது பலமான ஆதித்தத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. அதன் காரணமாக இந்த ஆண்டும் கொல்கத்தா அணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த ஆண்டு அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் பலர் மோசமாக விளையாடியதன் காரணமாக அந்த அணி மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு கே.கே.ஆர் அணி சந்தித்த பெரிய சறுக்கலுக்கு அந்த அணியின் புதிய கேப்டன் அஜின்க்யா ரஹானே தான் காரணம் என முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த ஆண்டு கே.கே.ஆர் அணி மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்ததற்கு காரணம் அந்த அணியின் கேப்டனான அஜின்க்யா ரஹானே செய்த பல தவறுகள் தான்.

குறிப்பாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்த வேளையில் ரியான் பராகிற்கு எதிராக மொயின் அலியை கொண்டுவந்தார். அப்படி அவர் ரியான் பராகிற்கு எதிராக மொயின் அலியை கொண்டு வந்தது ஒரு மோசமான முடிவு. ஏனெனில் கடைசி கட்டத்தில் வேறு வழியின்றி அனைவரையும் டார்கெட் செய்த ரியான் பராக் மொயின் அலி ஓவரில் எளிதாக முப்பது ரன்களை குவித்தார்.

- Advertisement -

ஒருவேளை அந்த ஓவரை அவர் வீசவில்லை என்றால் ராஜஸ்தான் அணி இன்னும் குறைவான ரன்களிலேயே சுருண்டிருக்கும். அதேபோன்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியிலும் கொல்கத்தா அணி தோல்வியை சந்தித்ததற்கு மிக முக்கிய காரணம் ரஹானேவின் கேப்டன்சி தான்.

இதையும் படிங்க : இந்தியாவால் முடியாததை நாங்கள் செய்து ஆஸியை வீழ்த்தி கோப்பையை வெல்வோம் – தெ.ஆ வீரர் சவால்

ஏனெனில் பிரேவிஸ்க்கு எதிராக அவர் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி இருந்தால் நிச்சயம் அந்த போட்டியிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருக்க வாய்ப்பிருந்திருக்கும். இப்படி ரஹானே எடுத்த பல தவறான முடிவுகள் அந்த அணியை மோசமான பாதைக்கு திருப்பியுள்ளது என ஹர்பஜன் சிங் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement