சிஎஸ்கே கோட்டையான சேப்பாக்கத்தில் விராட் கோலி ஆட்டம் எடுபடல.. இதை செய்யலன்னா ஆர்சிபி ஜெயிக்காது.. ஹர்பஜன் கருத்து

harbhajan singh 2
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக வரும் ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்குகிறது. இந்த வருடம் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஃப் டு பிளேஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

அதில் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள் அடித்து மாபெரும் உலக சாதனை படைத்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றி நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே நடைபெற்று முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் விளையாடாத அவர் புத்துணர்ச்சியுடன் 2024 ஐபிஎல் தொடரில் களமிறங்கி பெங்களூரு அணியின் வெற்றியில் பங்காற்றுவார் என்று அந்த அணி ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

சேப்பாக்கத்தில் எடுபடல:
இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள விராட் கோலி சிஎஸ்கே அணியின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் எப்போதுமே சுமாராக செயல்பட்டு வருவதாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். எனவே இந்த வருடத்தின் முதல் போட்டியில் பெங்களூரு வெல்ல வேண்டுமெனில் விராட் கோலி 20 ஓவர்களும் பேட்டிங் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய ஒட்டுமொத்த செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து விராட் கோலியின் மகத்துவம் சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்தே காணப்படுகிறது. அது பேட்டிங் செய்வதற்கு சவாலான மைதானமாகும். குறிப்பாக அங்கே துவக்க வீரர்கள் வேடிக்கையான டென்னிஸ் பந்து போன்ற பவுன்ஸை எதிர்கொள்வது சவாலாகும். மேலும் ஸ்டம்ப் லைனில் பந்து வீசி சவாலை கொடுக்கும் மகத்தான ஜடேஜா சென்னை அணியில் இருக்கிறார்”

- Advertisement -

“அவர் சாதாரண பந்தை கீழே கொண்டு வந்து திருப்புவார் என்பதால் அதை எதிர்கொள்வது சவாலாகும். எனவே 20 ஓவர்களும் பேட்டிங் செய்வதற்கு விராட் கோலி தயாரானால் மட்டுமே போட்டியில் வெற்றி பெறக்கூடிய செயல்பாடுகளை வெளிப்படுத்த முடியும். ஏனெனில் நீங்கள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 2 சதங்கள் அடித்தாலும் சேப்பாக்கத்தில் அதற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை”

இதையும் படிங்க: இந்தியா பாடத்தை கத்துக் கொடுத்துட்டாங்க.. பஸ்பாலில் அந்த மாற்றத்தை செய்வோம்.. மெக்கல்லம் அறிவிப்பு

“அது போக 2016 போல இம்முறையும் விராட் கோலி விளையாடுவது முக்கியம். ஏனெனில் விராட் கோலி ரன்கள் அடித்தால் அவருடைய அணியும் முன்னோக்கி நடக்கும். அப்போதும் பெங்களூரு கோப்பையை வெல்லுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர்களுடைய அணியில் விராட் கோலி, மேக்ஸ்வெல், கிரீன், படிடார் போல் அசத்தக்கூடிய தனிநபர் வீரர்கள் இருக்கின்றனர். எனவே 2016 போல விராட் கோலி அடங்கிய டாப் ஆர்டர் அதிகமாக ரன்கள் குவித்தால் மட்டுமே பெங்களூரு அணியால் முன்னோக்கி நடக்க முடியும்” என்று கூறினார்.

Advertisement