இந்தியா பாடத்தை கத்துக் கொடுத்துட்டாங்க.. பஸ்பாலில் அந்த மாற்றத்தை செய்வோம்.. மெக்கல்லம் அறிவிப்பு

Brendon Mccullum 4
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் வென்ற இந்தியா ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறி 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தை பிடித்துள்ளது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று சொன்ன இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது.

அதனால் பஸ்பால் எனப்படும் இங்கிலாந்து அணியின் அதிரடியாக பேட்டிங் செய்யும் அணுகுமுறை பல விமர்சனங்களை சந்தித்துள்ளது. குறிப்பாக பஸ்பால் அணுகுமுறையை மூட்டை கட்டி வைத்துவிட்டு சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடி முன்னேறும் வழியை பாருங்கள் என்று முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் இங்கிலாந்து அணியை விமர்சித்தார்.

- Advertisement -

பஸ்பாலில் மாற்றம்:
இந்நிலையில் இந்த தொடரில் தங்களை விட சிறப்பாக விளையாடி வெற்றி கண்ட இந்தியாவுக்கு பாராட்டு கொடுப்பதாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார். மேலும் அதிரடியாக மட்டுமே விளையாடி வெல்ல முடியாது என்பதை இந்திய தொடரில் உணர்ந்துள்ளதாக தெரிவிக்கும் மெக்கல்லம் இன்னும் சில மாதங்களில் பஸ்பால் அணுகு முறையில் தேவையான மாற்றத்தை செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதற்கு முன் பஸ்பால் விளையாடுவோம் என்று அடம் பிடித்த அவர் இது பற்றி டெலிகிராப் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இந்தியா விளையாடிய விதத்திற்கு பாராட்டுக்கள். அவர்கள் எப்போதும் அதிகப்படியான அழுத்தத்தில் இருந்தனர். ஏனெனில் அவர்கள் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் அந்த முக்கியமான தருணங்களை சரியாக கையாண்ட இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் எந்தளவுக்கு சிறந்த அணி என்பதை காண்பித்தனர்”

- Advertisement -

“சொல்லப்போனால் நாங்கள் விளையாட நினைத்த ஸ்டைலை அவர்கள் மிஞ்சி விட்டனர். அது நாங்கள் விளையாடும் விதத்தில் கொஞ்சம் பின்வாங்க வைத்துள்ளது. அதனால் நாம் மாற்றம் ஒன்றை செய்ய வேண்டியுள்ளது. இந்த தொடரில் நாங்கள் நிறைய கற்றுள்ளோம். இந்தியா எங்களை மிஞ்சி விளையாடியது. குறிப்பாக முக்கியமான தருணங்களில் உண்மையாகவே அவர்கள் எங்களை விட நன்றாக விளையாடி மிஞ்சி விட்டனர்”

இதையும் படிங்க: கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறிய ஜேசன் ராய்க்கு பதிலாக உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேன் ஒப்பந்தம் – வேறலெவல் தான்

“நாங்கள் எங்கள் வழியில் சுமாராக வெளிப்படும் போது சில பகுதிகளில் நீங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தெரிகிறது. 2 மாதங்களில் அதை செயல்படுத்துவோம். அடுத்த கோடை காலத்திற்குள் இந்த நிமிடத்தில் நாங்கள் பின்பற்றும் அணுகுமுறையில் மாற்றம் செய்த வெர்ஷனை உருவாக்குவோம். அதே சமயம் தற்போதைய அணுகுமுறையை வைத்து நாங்கள் கடந்த 2 வருடங்களாக நன்றாகவே விளையாடினோம். இங்கிலாந்தின் கிரிக்கெட்டில் உள்ள திறமைகளை அதை வைத்து நாங்கள் வெளிக்கொண்டு வந்தோம்” என்று கூறினார்.

Advertisement