ஆர்.சி.பி அணியின் கேப்டனாக இவரை போடுங்க சூப்பரா இருக்கும் – கவாஸ்கர் வெளிப்படை

Gavaskar
- Advertisement -

இந்தியாவில் அடுத்த மார்ச் மாதம் இறுதியில் 15-வது ஐபிஎல் தொடரானது நடைபெற உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே நடைபெற உள்ள இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது பெங்களூருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே 10 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்த வேளையில் மீதமுள்ள வீரர்கள் இந்த ஏலத்தின் மூலம் தேர்வு செய்து தற்போது தங்களது அணிகளை தயார் செய்து உள்ளன.

RCB

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே ஆர்சிபி அணி 3 வீரர்களை தக்க வைத்த நிலையில் மேலும் அணிக்கு வலு சேர்க்கும் வகையில் பல வீரர்களை தேர்வு செய்துள்ளது. ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் அந்த அணியின் புதிய கேப்டனாக யார் செயல்படுவார்? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடியும் முன்னரே விராட் கோலி இந்த சீசன் வரைதான் தான் கேப்டனாக செயல்படுவேன் என்று தெரிவித்திருந்தார்.

இதனால் இந்த சீசனுக்கு ஆர்.சி.பி அணியில் புதிய ஒருவரே கேப்டனாக செயல்படுவார்கள். அதன்படி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரோடு விராட் கோலி ஐபிஎல் தொடர் மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தனது கேப்டன் பதவியை துறந்தார். இதன் காரணமாக இந்த ஆண்டு பெங்களூரு அணியின் புதிய கேப்டனோடு விளையாடும் என்பது உறுதியாகியுள்ளது.

maxwell

இந்நிலையில் ஆர்.சி.பி அணிக்கு புதிய கேப்டனாக யார் செயல்படலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் பெங்களூர் அணியின் கேப்டனாக மேக்ஸ்வெல்லை நியமிக்கலாம் என்று கருதுகிறேன். ஏனெனில் கடந்த பெங்களூர் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பேட்டிங்கில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ஒருவேளை இந்த ஆண்டு அவரை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக அவர் அப்படி ஆடியிருக்கலாம். இருந்தாலும் நிச்சயம் அவரால் பெங்களூர் அணியை சிறப்பாக வழிநடத்த முடியும். ஏனெனில் ஒருசில வீரர்களால் 30 முதல் 40 ரன்களை விரைவாக குவிக்க முடியும். ஆனால் வெற்றிக்கு 70-80 ரன்கள் தேவைப்பட்டால் அது முடியாத காரியமாக இருக்கும். எனவே மேக்ஸ்வெல் போன்ற வீரரை கேப்டனாக நியமிக்கப்படும் பட்சத்தில் அவர் தான் விளையாடும் ஷாட்டுகளில் மீது கவனம் செலுத்துவார்.

இதையும் படிங்க : RCB அணியின் புதிய கேப்டன் இவர்தான். அதுக்காகத்தான் இவ்வளோ தொகை கொடுத்து – அவரை வாங்கியிருக்காங்க

அதோடு கேப்டன்சி பொறுப்பு காரணமாக அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற பொறுப்பும் வரும். இதன்காரணமாக மேக்ஸ்வெல்லுக்கு கேப்டன் பதவியை வழங்கலாம் என்று சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement