தோனி, கோலிய சொல்லல என மறுத்த கௌதம் கம்பீர் – பாகிஸ்தான் ரசிகர்கள் செய்த மெகா சதி, அம்பலமான ஆதாரம் இதோ

Gautam Gambhir Pakistan Fans
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 4ஆம் தேதி இந்தியா மற்றும் நேபாள் அணிகள் மோதிய போட்டியில் நட்சத்திர முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் வர்னணையாளராக செயல்பட்டார். அப்போது மாலை நேரத்தில் மழை வந்து போட்டி நிறுத்தப்பட்டதால் பெவிலியன் நோக்கி போனில் யாரிடமும் பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்த அவருடைய காதில் கேட்கும் அளவுக்கு மைதானத்தில் இருந்த ஒரு தரப்பு ரசிகர்கள் கோலி கோலி என்று வேகமாக கூச்சலிட்டு முழங்கினார்கள். அதற்கு அந்த ரசிகர்களுக்கு எதிராக தம்முடைய நடுவிரலை காட்டி கௌதம் கம்பீர் கூலாக நடந்து சென்றது சமூக வலைதளங்களில் வைரலானது.

முன்னதாக ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் விராட் கோலியை அடிக்கடி விமர்சிப்பதையும் களத்தில் சண்டை போடுவதையும் கௌதம் கம்பீர் வழக்கமாக வைத்திருக்கிறார். அதனால் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரை பிடிக்காதவராகவே அறியப்படும் கம்பீர் அவர்களுடைய ரசிகர்களுக்கு எதிராக அப்படி செய்ததில் ஆச்சரியமில்லை என்று நினைத்து அனைவருமே அந்த வீடியோவை உண்மை என்று நம்பி நீங்கள் எல்லாம் ஒரு ஜாம்பவானா? என்று சரமாரியாக திட்டி தீர்த்தார்கள்.

- Advertisement -

பாகிஸ்தான் ரசிகர்களின் வேலை:
இந்த நிலையில் அந்த வீடியோ வைரலானதை பார்த்த கெளதம் கம்பீர் அது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ரசிகர்கள் காஷ்மீர் பிரச்சனையை இணைத்து பேசியதற்காக அவ்வாறு நடுவிரலை காண்பித்ததாக நேரடியாக உண்மையை விளக்கினார். குறிப்பாக தம்முடைய நாட்டுக்கு எதிராக யார் பேசினாலும் அவ்வாறுதான் ரியாக்சன் கொடுப்பேன் என்று தைரியமாக சொன்ன அவர் சமூக வலைதளங்களில் வந்தது உண்மையல்ல என தெளிவுபடுத்தினார்.

அப்போது தான் பாகிஸ்தான் ரசிகர்கள் செய்த சதியும் அம்பலமானது. அதாவது ஆரம்பத்தில் வைரலான வீடியோவில் கௌதம் கம்பீர் வெள்ளை சட்டை அணிந்திருந்தார். ஆனால் இந்தியா மற்றும் நேபால் அணிகள் மோதிய போட்டியில் அவர் கருப்பு சட்டை அணிந்து வர்ணனை செய்தார். இங்கே உண்மை என்னவெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது வெள்ளை சட்டை அணிந்து பெவிலியன் நோக்கி சென்ற அவரிடம் பாகிஸ்தான் ரசிகர்கள் காஷ்மீர் சம்பந்தமாக ஏதோ கூச்சலிட்டதாக தெரிகிறது.

- Advertisement -

அதற்கு தான் கம்பீர் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எதிராக இப்படி ஒரு ரியாக்சன் கொடுத்தது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் ஆரம்பத்தில் வைரலான வீடியோவில் உண்மையான ஆடியோவை நீக்கிய பாகிஸ்தான் ரசிகர்கள் 2023 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் மைதானத்தில் கௌதம் கம்பீருக்கு எதிராக கோலி, கோலி என கூச்சலிட்ட இந்திய ரசிகர்களின் ஆடியோவை சேர்த்து எடிட்டிங் செய்து அவரை விராட் கோலி ரசிகர்களிடம் வில்லனாக காட்டியதும் அம்பலமாகியுள்ளது.

இதையும் படிங்க: ஆசிய கோப்பை வரலாற்றில் இர்பான் பதானின் ஆல் டைம் சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா – விவரம் இதோ

அத்துடன் ஆரம்பத்தில் வைரலான அந்த வீடியோவை பாகிஸ்தானை சேர்ந்த ஒரு ரசிகர் வெளிவந்திருக்கிறது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தோனி, கோலி போன்ற என்னுடைய நாட்டையும் நாட்டு வீரர்களையும் நான் விரும்புகிறேன் என்று கௌதம் கம்பீர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “உண்மை காலணிகளை அணிந்து கொண்டிருக்கும் போது ஒரு பொய் உலகம் முழுவதும் சுற்றிவர முடியும். உங்களிடம் தோன்றியது போல் எதுவுமில்லை. நமது தேசத்திற்கு எதிராக பயன்படுத்தப்படும் முழக்கங்களுக்கு நான் எப்படி நடந்து கொண்டேன் என்பதை எந்த இந்தியனும் தெரிந்து கொள்வான். நான் எங்கள் வீரர்களையும் நாட்டையும் நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement