நாட்டுக்காக விளையாடாம அதுக்காக ஆடுனா தோல்வி தான் கிடைக்கும்.. பாபர் அசாமை ஓப்பனாக விமர்சித்த கம்பீர்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்தது. டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா வெற்றி பெறுவதற்கு வெறும் 192 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 86 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 53* ரன்களும் விளாசி 117 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற வைத்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதற்கு உதவினார்கள். அதனால் உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா தங்களுடைய வெற்றி சரித்திரத்தை சொந்த மண்ணில் தக்க வைத்து இந்திய ரசிகர்களை தலை நிமிர வைத்தது.

- Advertisement -

கம்பீர் விமர்சனம்:
முன்னதாக அப்போட்டியில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஒரு கட்டத்தில் 155/2 என்ற நிலையில் இருந்த பாகிஸ்தான் அதன் பின் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 80 பந்துகளில் 36 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட்டானது. இந்நிலையில் பாபர் மற்றும் ரிஸ்வான் ஆகிய இருவரில் ஒருவர் கூட அதிரடியாக விளையாடாமல் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதே தோல்விக்கு காரணம் என்று கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

அதிலும் நாட்டுக்காக விளையாடாமல் அரை சதமடிக்க வேண்டும் என்ற தம்முடைய சொந்த சாதனைக்காக விளையாடினால் தோல்வி தான் கிடைக்கும் என்று பாபர் அசாமை வெளிப்படையாக விமர்சிக்கும் அவர் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசுவது பின்வருமாறு. “பாபர் அசாம் மெதுவாக விளையாடினார். பொதுவாக 2 பேட்ஸ்மேன்கள் ஒரே மாதிரி விளையாடி பார்ட்னர்ஷிப் அமைக்காமல் ஒருவர் ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டும்”

- Advertisement -

“ஒருவேளை நீங்கள் உங்களுடைய அரை சதம் அல்லது ரன்களுக்காக விளையாடினால் உங்களுக்கு இது போன்ற முடிவுகள் தான் கிடைக்கும். குறிப்பாக பாபர் அசாம் பொதுவாக நிறைய ரன்களை தனக்காக அடிக்கிறார். ஆனால் பாகிஸ்தான் வரலாற்றில் எப்போதுமே ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை பெறுவதையே விரும்புவார்கள். அதை ஷாஹித் அப்ரிடி, இம்ரான் நசீர் ஆகியோர் மிடில் ஆர்டரில் அப்படியே எடுத்துச் செல்வார்கள்”

இதையும் படிங்க: இங்கிலாந்து அணி பெற்ற தோல்வியால் ஆஸ்திரேலிய அணிக்கு அடித்த ஜாக்பாட் -புள்ளி பட்டியலில் ஏற்படவுள்ள மாற்றம்

“ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணியில் டாப் 3 இடங்களில் ஒருவர் கூட எதிரணியை அட்டாக் செய்யும் முயற்சிக்கவில்லை” என்று கூறினார். அந்த வகையில் வரலாற்றை மாற்ற விட்டாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் படுமோசமாக தோல்வியை சந்திக்காமல் வெற்றிக்காக போராடியிருக்கலாம் என்று ரமீஷ் ராஜா போன்ற சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் பாபர் அசாமை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement