RCB vs LSG : பெங்களூரு ரசிகர்களின் செயலுக்கு மோசமான வகையில் ரிப்ளை கொடுத்த கவுதம் கம்பீர – நடந்தது என்ன?

Gambhir
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய ஆரவாரத்திற்கு மத்தியில் தற்போது இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியும் பரபரப்பாக நடைபெற்று வரும் வேளையில் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடப்பு ஐபிஎல் தொடரின் 15-வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணியும், பெங்களூரு அணியும் மோதின.

Virat Kohli

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது துவக்கத்திலேயே 23 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன் காரணமாக மிகப்பெரிய அளவில் லக்னோ அணி தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 30 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 65 ரன்கள் விளாச, பின்வரிசையில் பூரான் 19 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் நான்கு பவுண்டரி என 62 ரன்கள் குவித்தார். இவர்கள் இருவரது அதிரடி காரணமாக லக்னோ அணி வெற்றியை நோக்கி எளிதாக சென்றது.

Gambhir 1

இருந்தாலும் இறுதி ஓவரில் ஐந்து ரன்கள் அடித்தால் வெற்றி என்று எளிதான இலக்கு இருந்தும் கடைசிவரை போட்டி சென்று கடைசி பந்தில் தான் போட்டி முடிவடைந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் 20-ஆவது ஓவரின் போது ஒவ்வொரு பந்திற்கும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஆர்.சி.பி, ஆர்.சி.பி என கத்திக் கொண்டே இருந்தனர்.

- Advertisement -

ரசிகர்கள் இப்படி தொடர்ச்சியாக கோஷம் எழுப்பியதால் கம்பீர் கடைசி ஓவரின் போது டக் அவுட்டில் சற்று கோபமாகவே அமர்ந்திருந்தார். இருப்பினும் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் சரியாக பந்தை பிடிக்காததால் பைஸ் வகையில் ஒரு ரன் ஓடி லக்னோ அணி வெற்றி பெற்றதும் மைதானத்திற்குள் ஓடி வந்த லக்னோ அணியின் வீரர்கள் இந்த வெற்றியை ஆக்ரோஷமாக கொண்டாடினார்கள்.

இதையும் படிங்க : வீடியோ : நீங்களும் சாதனைக்காக விளையாடும் பாபர் அசாம் மாதிரி ஆகிட்டீங்க – நேரலையில் விராட் கோலியை விளாசிய சைமன் டௌல்

அதிலும் குறிப்பாக லக்னோ அணியின் மெண்டார் கௌதம் கம்பீர் பெங்களூரு ரசிகர்களை நோக்கி களத்தில் இருந்தவரை தனது வாயின் மீது கை வைத்து அமைதியாக இருங்கள் என்பது போல சைகை செய்தார். கௌதம் கம்பீரின் இந்த மோசமான செயல் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement