வேகம் மட்டும் போதாது.. 10க்கும் 1க்கும் வித்யாசமில்ல.. ஆர்சிபி தோல்விக்கான காரணம் பற்றி கம்பீர் பேட்டி

Gautam Gambhir 66
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது. இந்த வருடம் ஆரம்பத்தில் ஒரு மாதமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய அந்த அணி கடைசி 6 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றது. குறிப்பாக கடைசிப் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை தோற்கடித்த ஆர்சிபி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதனால் மகளிர் அணியை போல இம்முறை ஆர்சிபி ஆடவர் அணியும் கோப்பையை வெல்லும் என்று அனைவரும் உறுதியாக நம்பினர். சொல்லப்போனால் ஆர்சிபி அணியின் வேகத்தை பார்த்து தாங்களும் குவாலிஃபயர் 1 போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தியதாக கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்தார். ஆனால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை சந்தித்த பெங்களூரு தொடர்ந்து 17வது வருடமாக கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது.

- Advertisement -

கம்பீர் கருத்து:
அதனால் விராட் கோலியும் ஆர்சிபி ரசிகர்களும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்று வேகத்தைப் பெற்றால் மட்டும் போதாது என ஆர்சிபி தோல்வி பற்றி கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் கேப்டனாக இருந்த போது கூட வேகம் என்ற வார்த்தையை நாங்கள் அதிகமாக பயன்படுத்துவோம்”

“ஆனால் உண்மையில் போட்டி நாளன்று நீங்கள் களத்தில் எந்தளவுக்கு விளையாடுகிறீர்கள் என்பது முக்கியம். குறிப்பாக பயமின்றி தைரியத்துடன் விளையாடும் அணிக்கே கடைசியில் சாதகம் கிடைக்கும். ஏனெனில் பேட் அல்லது பந்துக்கு வேகம் என்பது தெரியாது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அணிக்கும் 10வது இடத்தை பிடிக்கும் அணிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை”

- Advertisement -

“ஒருவேளை அந்த 2 அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். அதில் பத்தாவது இடத்தை பிடித்த அணி ஒன்றாவது இடத்தை பிடித்த அணியை தோற்கடித்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அதனாலயே ஐபிஎல் என்பது டி20 உலகக் கோப்பை போல உலகில் மிகவும் கடினமான தொடராக இருக்கிறது”

இதையும் படிங்க: அந்த தமிழ்நாட்டு பிளேயரை எடுத்துருந்தா.. இந்திய அணி இன்னும் 100% பலமா இருந்திருக்கும்.. ஹைடன் கருத்து

“எங்கள் அனைவருக்கும் ஒரே ஏலத்தொகையே கிடைக்கிறது. அனைவரும் இங்கே நல்ல அணியையே அமைக்கின்றனர்” என்று கூறினார். அதாவது இப்போதும் ஒன்றாவது இடத்தில் இருக்கும் அணியை தோற்கடிக்கும் திறமை பெங்களூரு அணியிடம் உள்ளதாக கம்பீர் கூறியுள்ளார். ஆனால் எலிமினேட்டர் போட்டியில் தைரியம் மற்றும் பயமின்றி விளையாடத் தவறிய காரணத்தால் ஆர்சிபி தோல்வியை சந்தித்ததாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement