- Advertisement -
ஐ.பி.எல்

தோனியை பாருங்க.. ஒரு டீம் வெற்றிகரமா செயல்பட சிஎஸ்கே அணுகுமுறை பொருந்தும்.. கம்பீர் பாராட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா கடைசியாக 2011 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றியில் அனைவரும் முக்கிய பங்காற்றினாலும் இறுதிப்போட்டியில் 97 ரன்கள் அடித்த கௌதம் கம்பீரும் 91* ரன்கள் விளாசி ஃபினிஷிங் செய்த கேப்டன் தோனியும் கருப்பு குதிரையாக செயல்பட்டனர். அத்துடன் ஐபிஎல் தொடரிலும் தோனி சென்னை அணிக்காக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

மறுபுறம் கொல்கத்தா அணிக்காக 2 கோப்பைகளை வென்றுள்ள கௌதம் கம்பீர் இப்போதும் தோனி மற்றும் ரோகித் சர்மாவுக்குப் பின் 2வது வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு மீண்டும் கௌதம் கம்பீர் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

கம்பீர் பாராட்டு:
அவருடைய வழிகாட்டுதலில் தேவையான வெற்றிகளை பெற்றுள்ள கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றை நெருங்கியுள்ளது. இந்நிலையில் 42 வயதாகும் தோனிக்கு கடந்த சில வருடங்களாகவே கடைசி சில ஓவர்களில் மட்டும் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்வதற்கான சுதந்திரத்தை சிஎஸ்கே நிர்வாகம் கொடுத்துள்ளதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு அணியிலும் சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் அனைத்து வீரர்களுக்கும் முழுமையான சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அணுகுமுறை ஐபிஎல் முதல் உள்ளூர் வரை அனைத்து கிரிக்கெட் அணிகளுக்கும் வெற்றிகரமாக செயல்படுவதற்கு பொருந்தும் என்று கம்பீர் கூறியுள்ளார். அத்துடன் ஒரு அணியில் சுதந்திரமின்மையை உணரும் போது தான் வீரர்கள் சொதப்புவார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது சிஎஸ்கே அணியின் திட்டமாகும். அவர்கள் தோனிக்கு சுதந்திரம் கொடுத்துள்ளனர்”

- Advertisement -

“இங்கே பல்வேறு அணிகள் வெவ்வேறு திட்டத்தை கொண்டுள்ளன. சிஎஸ்கே இந்த திட்டத்தை கடந்த 2 – 3 வருடங்களாக கடைப் பிடித்து வருகிறது. அந்த சுதந்திரம் தோனி தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அனுமதியை கொடுக்கிறது. நீங்கள் 20 – 25 பந்துகளை எதிர்கொள்ளும் போது கொஞ்சம் பொறுப்புடன் வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவீர்கள். ஆனால் வெறும் 8 – 10 பந்துகளை மட்டும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்தால் நீங்கள் சுதந்திரத்துடன் செயல்படுவீர்கள்”

இதையும் படிங்க: ஃபார்மில் இல்லாத கில் எதற்கு? 500 ரன்ஸ் அடிச்ச அவரை ஏன் எடுக்கல.. ஒருதலைபட்ச தேர்வுக்குழுவை விளாசும் ஸ்ரீகாந்த்

“சுதந்திரமின்மையும் பாதுகாப்புமின்மையும் தான் ஒரு வீரரின் தோல்விக்கு காரணமாக நான் பார்க்கிறேன். ஒருவேளை உங்களிடம் திறமை இல்லாமல் போயிருந்தால் உங்களால் முதல் தரம், ஐபிஎல் அல்லது சர்வதேச அளவில் ஒரு போட்டியில் கூட விளையாட முடியாது. அதனால் உங்களுடைய அணியில் வீரர்களுக்கு பாதுகாப்பு இருப்பது முக்கியம். பாதுகாப்பான உடைமாற்றம் அறையே கடைசியில் வெற்றி பெறுகிறது” என்று கூறினார்.

- Advertisement -