- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதுக்கு ஓகேன்னா.. நான் ஓகே.. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்காக கண்டிஷன் போட்டுள்ள – கவுதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க விருப்பம் இல்லை என்று ஏற்கனவே டிராவிட் வெளிப்படையாக அறிவித்து விட்டதால் அடுத்த புதிய தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தீவிரப்படுத்தி உள்ளது.

அந்த வகையில் மே 27-ஆம் தேதி வரை புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்த வேளையில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு முக்கிய நபர்கள் இந்த பயிற்சியாளர் பதவிக்காக விண்ணப்பித்து வருகின்றனர். அதோடு இந்திய முன்னாள் வீரர்களும் இந்த பதவிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்பி இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

அதுமட்டும் இன்றி ஏற்கனவே பிசிசிஐ தரப்பில் சில முக்கிய முன்னாள் வீரர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீரிடமும் அடுத்த பயிற்சியாளருக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் பிசிசிஐ இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிற்கு கெளதம் கம்பீரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அந்த பேச்சு வார்த்தையில் கௌதம் கம்பீர் தனக்கு தான் அந்த பதவி வழங்கப்படும் என்ற உத்தரவாதம் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தான் விண்ணப்பம் செய்வேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

முன்னாள் இந்திய வீரரான கௌதம் கம்பீர் தற்போது கொல்கத்தா அணிக்காக ஆலோசராக செயல்பட்டு வரும் வேளையில் இந்த தொடரில் கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேபோன்று கடந்த இரு ஆண்டுகளாக லக்னோ அணியின் மென்டராக இருந்தபோது அந்த அணி பிளே ஆப் சுற்றிற்கு நுழைந்தது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் அவரிடம் இந்த பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தெருக்களில் இறங்க நாங்க இந்தியர்கள் கிடையாது.. இது தான் ஆஸ்திரேலியா.. கேப்டன் பட் கமின்ஸ் பேட்டி

மேலும் பி.சி.சி.ஐ நிர்வாகிகள் அனைவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியை காண சென்னை வரவுள்ள வேளையில் அந்த போட்டி முடிந்த பின்னர் கம்பீரிடம் மீண்டும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அந்த பேச்சு வார்த்தையில் இருவருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டால் நிச்சயம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பார் என்று தெரிகிறது.

- Advertisement -