இன்னும் எவ்வளோ நாள் இருக்கப்போறீங்க. யோசிச்சி முடிவு எடுங்க – தோனிக்கு அட்வைஸ் கொடுத்த கங்குலி

Ganguly
- Advertisement -

இந்திய அணிக்காக மூன்றுவகை ஐ.சி.சி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி. அவரது ஓய்வு குறித்த விவாதம் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வருகிறது. அதுவும் குறிப்பாக உலக கோப்பை தொடருக்கு பின்னர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற குரல் எழுந்த வண்ணமே உள்ளன. ஆனால் தோனி ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

Dhoni-1

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தோனி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தங்களுடைய சகாப்தம் நிறைவுக்கு வரும்போது ஒரு கட்டத்தில் முடித்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதே போல தான் சச்சின், லாரா, பிராட்மேன் போன்ற ஜாம்பவான்களும் தங்களது ஆட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

அதை போல தான் உங்களுக்கும் தற்போது ஒரு தருணம் வந்திருக்கிறது தோனி நீங்கள் இன்னும் எவ்வளவு நாட்கள் இந்திய அணிக்காக விளையாட போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். மேலும் அவ்வாறு நீங்கள் விளையாடப்போகிறோம் என்று முடிவு செய்தால் பழைய தோனியை போன்றே விளையாட வேண்டும். அப்போதுதான் உங்களால் அணிக்கு வெற்றி தேடித் தர முடியும் என்று நான் நினைக்கிறேன்.

Dhoni 1

உங்களுடைய முடிவை நீங்கள் தான் எடுக்க வேண்டும். உங்களிடம் எவ்வளவு ஆற்றல் உள்ளது, போட்டியை வெற்றிபெற வைக்கும் திறன் எவ்வளவு உள்ளது என்பது உங்களுக்கு தான் தெரியும் எனவே நீங்கள் உங்களுடைய பாணியில் விளையாடுங்கள். மேலும் இன்னும் எவ்வளவு காலம் தோனி விளையாடுவார் என்ற தகவலை பி.சி.சி.ஐ கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் நீண்ட நாட்கள் விளையாடப் போவதில்லை என்று கங்குலி தோனி குறித்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement