நாங்க பிரண்ட்ஸ்ஸா இருந்த அப்போ ஒன்னா தூங்கினோம். தோனியுடனான உறவு குறித்து பேசிய – இந்திய சீனியர் வீரர்

dhoni
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் கௌதம் கம்பீருக்கு முன்னதாகவே அறிமுகமானவர் மகேந்திரசிங் தோனி. இருவரும் கிட்டத்தட்ட ஒரே பாதையில் பயணித்தார்கள். ஆனால் தோனிக்கு கூடுதல் திறமைகளும் ஆக்ரோஷமும் அதிகம். அவர் எடுத்த முடிவுகள் அவரை மிகச் சிறந்த இந்திய கிரிக்கெட் கேப்டனாக மாற்றியது.

- Advertisement -

ஆனால் கௌதம் கம்பீர் ஒரு துவக்க வீரர் ஆகவே இருந்து ஓய்வு பெற்றார். கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து இரண்டு கோப்பைகளை பெற்றுக் கொடுத்துள்ளார் அவ்வளவுதான். தோனியின் மீது கௌதம் கம்பீருக்கு எப்போதுமே ஒரு கோபம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. எப்போது பார்த்தாலும் கிரிக்கெட் பற்றி அவர் பேசுகையில் தோனியை ஏதாவது குறை கூறி விடுவார்.

இப்படித்தான் சமீபகாலமாக ஏதாவது ஒன்று பேசி வருகிறார் இந்நிலையில் தனக்கும் தோனிக்கும் துவக்கத்தில் நல்ல நட்பு இருந்ததாக பேசியுள்ளார் கம்பீர். இதுகுறித்து அவர் கூறுகையில்…
நானும் தோனியும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் தான் அறிமுகமானோம். நாங்கள் ஆரம்ப காலத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது ஒரே அறையில் ஒரு மாதத்திற்கும் மேலாக இருவரும் தங்கி இருந்தோம். அப்போது நாங்கள் அதிகமாக பேசிக்கொள்வோம்.

Gambhir

குறிப்பாக அவரது முடியைப் பற்றி தான் அதிகமாக பேசிக்கொண்டிருப்போம். அப்போது அவருக்கு மிக நீளமான முடி இருந்தது. அதனை எவ்வாறு பராமரிப்பது எப்படி அதனை.பாதுகாத்து வைப்பது என்பது குறித்தெல்லாம் என்னுடன் பகிர்ந்து கொள்வார் .

Gambhir

ஒருமுறை ஒரு சிறிய அறையில் இருந்த போது நாங்கள் இருவரும் அருகிலேயே படுத்து உறங்கினோம் அதுவும் தரையில் படுத்து தூங்கினோம் என்று கூறியுள்ளார் கௌதம் கம்பீர். தொடர்ந்து தோனி குறித்து சற்று எதிர்மறையான விடயங்களை கூறிவரும் கம்பீர் தற்போது சற்று மாற்றமாக அவருடன் இருந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Advertisement