இதுதான் தோனியின் புத்திசாலித்தனம். எப்படி பண்ணாரு பாத்தீங்களா ? – தோனியை புகழ்ந்த கம்பீர்

Gambhir
- Advertisement -

2008ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டும் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதுவரை 13 ஐபிஎல் சீசன்கள் நடைபெற்ற இருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்று யாரும் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை கோப்பையை வென்று இருக்கிறது.

- Advertisement -

2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 வது ஐபிஎல் சீசனின் ஏலத்தை பிப்ரவரி 11ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கு முன்னர் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 20ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியின் ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களின் பட்டியலையும், மோசமாக விளையாடியதால் வெளியேற்றப்படும் வீரர்களையும் அறிவித்திருக்கிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட வீரர்கள் அனைவரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் ஏலத்தின் மூலம் மற்ற அணியில் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வெறியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

CSK

இதில் கேதர் ஜாதவ், முரளி விஜய், வாட்சன், சாவ்லா, மோனு சிங், ஹர்பஜன் சிங் ஆகிய ஆறு வீரர்கள் வெறியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் சென்னை அணி கிட்டத்தட்ட 22 கோடி மீதம் வைத்திருக்கிறது. இந்நிலையில் சென்னை அணியின் இந்த செயல்பாட்டை பாராட்டியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் : சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை தவிர வாட்சன் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்

- Advertisement -

மற்றபடி அணியில் பெரிய மாற்றங்களை எதுவும் செய்யவில்லை. இதுதான் சென்னை அணியின் வியூகம் என்று தோனியை பாராட்டியுள்ளார் கம்பீர். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : இது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி. அணிக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்றாற்போல் முடிவு எடுப்பவர் தோனி என்பதை எப்போதும் நான் சொல்வேன். அதேபோன்று இந்த முறையும் நடந்துள்ளது. மற்ற அணிகள் எல்லாம் எதிர்காலம் குறித்து யோசிக்க தோனி இந்த சீசனை மட்டுமே கருத்தில் கொண்டு சில மாற்றங்களைச் செய்துள்ளார்.

cskvssrh

இந்த சீசனில் சென்னை அணியில் பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று எல்லோரும் கூறிவந்த நிலையில் அதை வேண்டாத வேலை என்பதனால் விளையாடும் பதினொரு வீரர்கள் மட்டுமல்லாது டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும் வீரர்களுக்கும் சேர்த்து யோசித்து சென்னை அணி வீரர்களை கழற்றிவிட்டு உள்ளது இதுதான் தோனியின் தொழில்முறை யுக்தி எனவும் கம்பீர் புகழ்ந்து
உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement