கண்டிப்பா 200 ரன்னை சேஸ் பண்ண முடியும்னு எனக்கு தெரியும்.. ஆனா இப்படி நடக்கும்னு தெரியாது – டூபிளெஸ்ஸிஸ் மகிழ்ச்சி

Faf
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் போட்டியானது ஏப்ரல் 28-ஆம் தேதி இன்று மதியம் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுப்மம் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சாய் சுதர்சன் 84 ரன்களையும், ஷாருக் கான் 58 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 ஓவரிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 206 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பாக வில் ஜேக்ஸ் ஆட்டமிழக்காமல் 100 ரன்களையும், விராட் கோலி 70 ரன்களையும் அடித்து களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கூறுகையில் : உண்மையிலேயே இந்த மைதானம் ரன் குவிப்பிற்கு ஏற்ற மைதானம் என்பதை நான் புரிந்து கொண்டேன். நாங்கள் முதலில் பந்துவீசும் போது 200 ரன்களை விட்டுக் கொடுத்தும் எங்களால் அதை சேசிங் செய்ய முடியும் என்று நினைத்தோம்.

- Advertisement -

ஆனால் அதனை 16 ஓவர்களில் இவ்வளவு விரைவாக முடிப்போம் என்று நினைக்கவில்லை. இருந்தாலும் நாங்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளோம். இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் நாங்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் தற்போது பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டு துறைகளிலும் நல்ல நம்பிக்கையுடன் விளையாடி வருகிறோம். எங்களது அணியின் வீரர்கள் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஜேக்ஸ் 16 ஓவரில் முடிச்சுட்டாரு.. என்னோட ஸ்ட்ரைக் ரேட்டை பற்றி பேசுறவங்களுக்காக இதான் பதில்.. கோலி பேட்டி

இந்த ஸ்கோரை பார்க்கும்போது பவுலர்கள் என்ன செய்கிறார்கள்? என்று கேட்கத் தோன்றும் ஆனால் விடயம் அப்படி அல்ல. டி20 கிரிக்கெட் நிறைய மாறிவிட்டது. குறிப்பாக தற்போதெல்லாம் 220 ரன்களுக்கு மேல் எடுத்தால் தான் அது வெற்றிக்கான ஸ்கோராக இருப்பதால் எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக பந்து வீசி உள்ளனர் என டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement