அந்த 2 பேரோட கேட்சை விட்டோம்.. மொத்தமும் போச்சு.. லக்னோ அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

Faf
- Advertisement -

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது.

லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரரான குவிண்டன் டிகாக் 81 ரன்களையும், நிக்கோலஸ் பூரான் 40 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன்காரணமாக லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கூறுகையில் :

இந்த போட்டியில் நாங்கள் தவறவிட்ட கேட்ச்கள் தான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக இரண்டு முக்கிய வீரர்களின் எளிதான கேட்சை நாங்கள் தவறவிட்டோம். குவிண்டன் டி காக் 25 முதல் 30 ரன்கள் வரை இருக்கும் போதும், நிக்கோலஸ் பூரான் 2 ரன்களில் இருக்கும்போதும் கேட்சை தவறவிட்டோம்.

- Advertisement -

அதன் விளைவாக அவர்கள் 60 முதல் 65 ரன்கள் வரை அதிகமாக குவித்து விட்டார்கள். இதுபோன்ற தவறுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டோம். மாயங்க் யாதவுடைய ஆக்சன் புதிதாக இருப்பதனால் அவரை எதிர்கொள்வது சிரமமாக இருக்கிறது. இவ்வளவு வேகத்திலும் அவர் லைன் மற்றும் லெந்த்தை கண்ட்ரோல் செய்து அற்புதமாக வீசுகிறார்.

இதையும் படிங்க : உதயமான புதிய நாயகன்.. 17 வருட ஐபிஎல் வரலாற்றில் தோனி போன்ற யாருமே செய்யாத வரலாற்றுச் சாதனை

இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்று உணர்கிறேன். ஏனெனில் போட்டியின் ஆரம்பத்திலேயே அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர். பின்னர் மேக்ஸ்வெல் சிறப்பாக பந்துவீசி கட்டுக்குள் கொண்டு வந்தாலும் இறுதி கட்டத்தில் மீண்டும் ரன்கள் சென்று விட்டது என தோல்விக்கான காரணம் குறித்து டூபிளெஸ்ஸிஸ் பேசியது குறிப்பிடப்பட்டது.

Advertisement