இன்னைக்கு தான் நாங்க நல்லா தூங்குவோம்.. சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான வெற்றி குறித்து – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

Faf
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஃபேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 51 ரன்களையும், பட்டிதார் 50 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி இந்த இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக சபாஷ் அகமது 40 ரன்களையும், பேட் கம்மின்ஸ் 31 ரன்களையும் குவித்து அசத்தினர். இதன் காரணமாக பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கூறுகையில் : கடந்த இரண்டு போட்டிகளாகவே நாங்கள் சிறப்பான போராட்டத்தை அளித்திருந்தோம். சன்ரைசர்ஸ் அணி 270 ரன்களுக்கு மேல் அடித்தும் நாங்கள் 260 ரன்கள் வரை சென்றோம்.

- Advertisement -

அதே போன்று கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியிலும் ஒரு ரன் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்தோம். இப்படி நெருக்கமாக சென்று போட்டிகளை இழந்து வந்த வேளையில் ஒரு வெற்றி என்பது நிச்சயம் எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும். இன்று பெற்ற வெற்றியின் மூலம் நாங்கள் நிம்மதியாக நல்லபடியாக தூங்குவோம். போட்டியில் வெற்றி பெற்றால் நம்பிக்கை தானாக வெளிவரும்.

இதையும் படிங்க : 11 ஒய்ட்ஸ்.. கடைசி பந்தில் 6.. சொந்த மண்ணில் இளம் நியூசிலாந்து அணியிடம்.. பாகிஸ்தானுக்கு நேர்ந்த சோகம்

அந்த வகையில் இந்திய போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த தொடரின் ஆரம்பத்தில் விராட் கோலி மட்டுமே ரன்களை குவித்து வந்த வேளையில் தற்போது கேமரூன் கிரீன் ரன் குவித்து வருவது எங்களுக்கு நன்மை சேர்த்து உள்ளது. சின்னசாமி மைதானத்தில் வைத்து மற்ற அணிகளை சுருட்டு கடினமாக இருந்த வேளையில் தற்போது வெளியில் கிடைத்துள்ள இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது என டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement