வேணாம் சாமி.. கும்பிட்டு கேட்காத கோலி.. ஆலோசனை சொல்லும் அளவுக்கு பெரியவனில்லை என்று பேசிய டிகே

Dinesh Karthik
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்றப் போட்டியில் ராஜஸ்தானை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதையும் சேர்த்து 6வது வெற்றியைப் பெற்ற பெங்களூரு புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. அதனால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றை நெருங்கி வருகிறது.

அந்தப் போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 70 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த வருடம் ஆரம்பம் முதலே சீராக அசத்தி வரும் அவர் ஆரஞ்சு தொப்பி பட்டியலில் 2வது இடத்தில் ஜொலித்து வருகிறார். முன்னதாக அந்தப் போட்டியில் விராட் கோலி வழக்கம் போல பௌண்டரி எல்லையில் நின்று ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

- Advertisement -

கும்பிட்ட விராட் கோலி:

அப்போது ஒரு தருணத்தில் விராட் கோலியிடம் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் மற்றும் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஏதோ ஆலோசனை தெரிவித்தனர். அதை வேணாம் சாமி என்ற வகையில் விராட் கோலி கையெடுத்து கும்பிட்டு ஏற்க மறுத்து விட்டார். அந்த தருணம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இறுதியில் போட்டி முடிந்ததும் விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரருக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு தாம் பெரியவன் கிடையாது என்று தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சியுடன் பாராட்டினார். இது பற்றி பெங்களூரு அணியின் உடை மாற்றும் அறையில் தினேஷ் கார்த்திக் பேசியது பின்வருமாறு. “இப்போதும் விராட் கோலியிடம் இருக்கும் வெற்றிக்கான பசியைப் பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்லை”

- Advertisement -

டிகே பாராட்டு:

“ஐபிஎல் தொடரில் 18 வருடங்கள் விளையாடுவது ஒரு விஷயம். ஆனால் அந்த 18 வருடங்களும் தொடர்ச்சியாக அசத்துவது மற்றொரு விஷயம். பெங்களூருவில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளில் அவர் என்னிடம் 2 விஷயங்கள் சொன்னார். ஒன்று இம்முறை தாம் இன்னும் நன்றாக உணர்வதாக விராட் கோலி சொன்னார். மற்றொன்று இம்முறை தம்முடைய பேட்டிங்கை பார்க்க நிறைய ரசிகர்கள் வந்துள்ளதாக அவர் சொன்னார்”

இதையும் படிங்க: 154 ரன்ஸ்.. 18 வருடத்தில் இல்லாத 6 இளம் வீரர்கள்.. 2018க்குப்பின் வரலாறு காணாத முயற்சியால் சிஎஸ்கே வெல்லுமா?

“சூழ்நிலைகளை புரிந்து கொண்டு தன்னை மாற்றியமைக்கும் விதம் உட்பட அவர் எதையாவது தன் மனதில் செலுத்தினால் அதை சிறப்பாக செய்வார். எனவே அவரைப் பற்றி பேசுவதற்குக் கூட தகுதியில் நான் மிகவும் சிறியவன். அவர் முற்றிலும் சாம்பியன். தேவ்தூத் படிக்கல், பில் சால்ட் ஆகியோரை அவர் வழிநடத்திய விதம் அற்புதமாக இருந்தது. அவருடைய பாடி லாங்குவேஜ் மற்றும் விளையாட்டில் உள்ள அர்ப்பணிப்பு சிறப்பானது” என்று கூறினார்.

Advertisement