Dinesh Karthik : ரஸல்க்கு நாங்கள் தரும் இடமே அவர் சிறப்பாக விளையாட காரணம் – தினேஷ் கார்த்திக்

நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிரேயான போட்டியில் கொல்கத்தா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில் ரசல் பற்றி கூறினார்.

Dinesh
- Advertisement -

ஐ.பி. எல் தொடரின் 17 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது, இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்று பந்துவீச்சினை தேர்வு செய்தது கொல்கத்தா. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 84 ரன்களை அடித்தார்.

Kohli 1

- Advertisement -

பிறகு 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ற்றங்களை அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் சார்பாக க்றிஸ் லின் 43 ரன்களும், ரஸ்ஸல் 48 ரன்களும் அடித்தனர். இதன்மூலம் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் கூறியதாவது : ரசலின் இதுபோன்ற ஆட்டம் பேசுவதற்கு எதுவுமில்லை. அவ்வளவு சிறப்பாக ஆடினார். மேலும், நாங்கள் அவருக்கு ஒன்றை மட்டுமே கூறுவோம் நீங்கள் உங்களது கிரிக்கெட்டை அனுபவித்து எந்த பிரஷரும் இல்லாமல் உங்களது ஷாட்களை ஆடுங்கள். அவ்வாறு ரசல் சுதந்திரமாக ஆடுகிறார். அதனால் அவரால் சிறப்பாக ரன்களை குவிக்க முடிகிறது.

Russell

ரசல் ஸ்பின்னர்கள் மட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளர்களையும் அடித்து ஆடுகிறார். மேலும், துவக்க வீரரான க்றிஸ் லின் சிறப்பான துவக்கத்தினை தொடர்ந்து அளித்து வருகிறார். ஒரு அணி எப்போதும் வெற்றி பெறுவது என்பது ஒரு கேப்டனாக எனக்கு மகிழ்ச்சியே என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

- Advertisement -

அடுத்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் இடையே இன்று மாலை 4 மணிக்கு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ashwin

இதையும் படிக்கலாமே :

Virat Kohli : இதற்கு மேல் நான் என்ன செய்வதென்று தெரியவில்லை. தோல்விக்கு இதுதான் காரணம் – கோலி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

Advertisement