சென்னைக்கு வந்ததும் தோனி செய்யவிருக்கும் முதல் காரியம் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

Dhoni
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கிய டிஎன்பிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக பல்வேறு மைதானங்களில் நடத்தப்படாமல் சென்னை சேப்பாக்கத்தில் மட்டும் அனைத்து போட்டிகளையும் நடத்தி முடிக்க தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

TNPL

அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கிய இந்த டிஎன்பிஎல் தொடரானது தற்போது வரை எந்தவித தடையும் இன்றி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதில் திருச்சி வாரியர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன.

- Advertisement -

இதன்பிறகு நாளை திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி முதல் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் எனவே நாளைய போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளைய போட்டியில் ரசிகர்களின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் விதமாக தற்போது ஐபிஎல் தொடர்பாக சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நாளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையில் பேச உள்ளார்.

Dhoni

ஏற்கனவே இந்த தொடரில் தினேஷ் கார்த்திக், நடராஜன், சுரேஷ் ரெய்னா, ருதுராஜ் கெய்க்வாடு போன்றோர் போட்டியின் போது நேரலையில் பங்கேற்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதேபோன்று நாளைய போட்டியில் தோனி அவரது கருத்துக்களை பரிமாற இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக நாளை போட்டியை ரசிகர்கள் நிறைய பேர் தொலைக்காட்சியில் கண்டுகளிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடருக்காக தற்போது சென்னை வந்துள்ள தோனி விரைவில் அமீரகம் புறப்படுவார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement