அணியில் ஒரு அதிரடி மாற்றத்தை செய்த தல தோனி. முதலில் பவுலிங் – தோனியின் திட்டம் இதுதான்

dhoni 1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 44-ஆவது லீக் போட்டி தற்போது ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடுகின்றனர். இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை அணி கடைசி இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர் கொள்வதால் நிச்சயம் எளிதாக சிஎஸ்கே அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

csk vs srh

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் சென்ற ஆட்டத்தில் விளையாடிய பிளேயிங் லெவனில் இருந்து ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் தோனி செய்துள்ளார். அதன்படி சென்ற போட்டியில் விளையாடிய சாம் கரனுக்கு பதிலாக இந்த போட்டியில் பிராவோ இணைக்கப்பட்டுள்ளார். தற்போது டாஸ் வென்ற தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்பின்னர் அவர் இந்த போட்டி குறித்து பேசுகையில் : நாங்கள் இந்த போட்டியில் முதலில் பந்து வீச விரும்புகிறோம். ஏனெனில் இந்த மைதானத்தின் அளவுகள் மிகவும் சிறியது. அதுமட்டுமின்றி ஆடுகளம் பிரஷ்ஷாக இருப்பதால் எவ்வாறு செயல்படப் போகிறது என்பதை பார்க்க வேண்டும். மைதானம் என்னைப் பொருத்தவரை சற்று ஸ்லோவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

bravo

இந்ததொடர் முழுவதும் எங்களது அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் பிராக்டீஸ் செய்கிறோம். இந்த மைதானம் ஸ்லோவாக இருக்கும் என்பதனாலேயே நாங்கள் சேசிங் செய்ய விரும்புகிறோம். அது மட்டுமின்றி இந்த லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் நாங்கள் இருப்பதை உறுதி செய்தாக வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : வெறும் 10 லட்ச ரூபாய்க்கா நான் சூதாட போறேன் – தன்னுடைய தடை குறித்து மனம்திறந்த ஸ்ரீசாந்த்

எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறவே நாங்கள் முயற்சிப்போம் என்று கூறினார். அதுமட்டுமின்றி அணியில் ஒரு மாற்றமாக சாம் கரனுக்கு பதிலாக பிராவோ விளையாடுகிறார் என்றும் தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement