தோல்வின்னு வந்தா முன்னாடி. வெற்றின்னு வந்தா பின்னாடி – கோப்பையை கையில் வாங்கியதும் தோனி செய்த செயல்

Dhoni-3 IPL
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த 14-வது ஐபிஎல் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணியின் வீரர்கள் கொல்கத்தாவை இரண்டாவது இன்னிங்சின் போது லாவகமாக எதிர்கொண்டு வெற்றி பெற்றனர்.

csk 1

- Advertisement -

இந்த வெற்றிக்கு தற்போது உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே வேளையில் தனிப்பட்ட முறையில் தோனிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத சென்னை அணியை பலரும் கிண்டல் செய்த வேளையில் இந்த ஆண்டு மீண்டும் அதே அணியை வைத்து கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இந்நிலையில் கோப்பையை கைப்பற்றிய பிறகு தோனி செய்த செயல் தற்போது அவரின் குணத்தை வெளிக்காட்டுவது மட்டு மின்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டையும் பெற்றுள்ளது. அதன்படி போட்டி முடிந்த பிறகு சென்னை அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்ட பின்னர் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவரான சவுரவ் கங்குலி மற்றும் முக்கிய நிர்வாகி ஜெய் ஷா ஆகிய இருவரும் கோப்பையை தோனியிடம் வழங்கினார்கள்.

dhoni 2

கோப்பையை பெற்ற தோனி நேராக வந்து தீபக் சாஹரிடம் கொடுத்து வெற்றியை கொண்டாடும் படி கூறிவிட்டு பின்னால் சென்று நின்று கொண்டார். தோனி இதேபோன்று செய்வது வாடிக்கை தான் என்றாலும் அவரது குணம் மீண்டும் இந்த செயலிலும் வெளிப்பட்டுள்ளது. அதாவது எத்தனை முறை தோல்வியை சந்தித்தாலும் அணியின் கேப்டனாக தானாக முன்வந்து அந்த தோல்விக்கான அனைத்து பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும் தோனி வெற்றி பெறும்போது கோப்பையை இளம் வீரர்களின் கையில் கொடுத்து அவர்களை கொண்டாட வைத்து ரசிப்பது அவருடைய ஸ்டைல்.

- Advertisement -

இதையும் படிங்க : கான்ட்ராக்ட் போட்டு டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமனம் – பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு

அந்த வகையில் இந்த ஐபிஎல் கோப்பையை பெற்ற பின்னரும் இளம் வீரர்கள் கையில் ஒப்படைத்து ஒரு ஓரமாக நின்று அணி உறுப்பினர்களுடன் அவர் வெற்றியைக் கொண்டாடியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement