“Definitely Not” ஒரே வார்த்தையில் சென்னை ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன தல தோனி – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 53 வது லீக் போட்டி தற்போது அபிதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடி வருகின்றன. முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

CSKvsKXIP

- Advertisement -

அதன்படி தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்துள்ளது. துவக்க ஆட்டக்காரர்களான ராகுல் 29 ரன்களும், அகர்வால் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் கெயில் 12 ரன்கள் மற்றும் நிக்கலஸ் பூரன் 2 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சியளித்தனர்.

அதன் பின்னர் தீபக் ஹூடா பின்வரிசையில் இறங்கி சிறப்பாக விளையாடி 30 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் காரணமாக தற்போது 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்க தயாராக வருகிறது. இந்த போட்டியில் டாஸ் போடப்பட்ட பிறகு வர்ணனையாளர் டேனி மோரிசன் சிஎஸ்கே அணிக்காக இது உங்களது கடைசி போட்டியாக இருக்குமா ? என்ற கேள்வியை டோனியிடம் கேட்டார்.

Dhoni 1

அதற்கு பதில் அளித்த தோனி : சிரித்துக்கொண்டு நிச்சயமாக இல்லை (Definitely Not) என பதில் அளித்தார். இதிலிருந்து எம்எஸ் தோனி அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடுவார் என்பது தெரியவந்துள்ளது. இத்தொடரின் ஆரம்பத்தில் இருந்தே இது தோனியின் கடைசி தொடராக இருக்குமோ ? என்ற பயத்தில் இருந்த ரசிகர்களுக்கு அவரது பதில் திருப்தி அளித்துள்ளது.

Dhoni

இதன்மூலம் அடுத்த ஆண்டு தான் விளையாட போவதை உறுதி செய்துள்ளார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த கருத்தால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். மேலும் அவரின் மீது இருந்த விமர்சனத்திற்கு ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்துதுள்ளார் தல தோனி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement