நேற்றைய மும்பை மற்றும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 18 பந்தில் 13 ரன்களை அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் ஜடேஜா பந்துவீச்சில் தோனியிடம் கேட்சாகி வெளியேறினார். அந்த கேட்சை பிடித்த தோனி அம்பயரிடம் முடிவினை எதிர்பார்க்காமல் அவுட் என்று கருதி அவரே விக்கெட் கொண்டாட்டத்தினை ஆரம்பித்தார். இதோ அந்த வீடியோ :
Hands like glue – MS Dhoni https://t.co/iQKiu0LxOm via @ipl
— Siva.k (@sivakubendiran) April 4, 2019
ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 59 ரன்களை குவித்தார்.
பிறகு 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி துவக்கத்திலேயே சரிவை கண்டது. ராயுடு மற்றும் வாட்சன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேலும், பின்னால் வந்த வீரர்களும் வரிசையாக நடையை கட்ட சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.