இப்போதைக்கு என்னுடைய நினைப்பு எல்லாம் இந்த ஒரு விடயத்தில் மட்டும் தான் இருக்கு – கேப்டன் தவான் அதிரடி

Dhawan
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ளதால் ஷிகார் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி இலங்கை தொடருக்கு அனுப்பப்பட்டது. இந்த தொடரில் முதலில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் தற்போது அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.

IND

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக கேப்டன் ஷிகர் தவான் சில தகவல்களை பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் வருகின்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் துவக்க வீரர் காண இடத்தை தக்கவைக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இது எனக்கு ஒரு முக்கியமான தொடர். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் நான் தாக்கத்தை ஏற்படுத்தினால் தான் என்னால் தொடர்ந்து அணியில் இடம்பிடிக்க முடியும். நான் இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் வருகின்ற டி20 உலகக் கோப்பைக்கான தொடரில் துவக்க வீரராக இடம் பிடிப்பேன்.

Dhawan 1

மேலும் நான் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட விரும்புகிறேன். அதை வருங்காலத்தில் நீங்கள் பார்க்கலாம் என்று இந்த இலங்கை டி20 தொடருக்கு முன்னர் தவான் கூறியுள்ளார். ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்ற ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார்.

தற்போது நடைபெற்று வெற்றி பெற்ற ஒருநாள் தொடரிலும் சிறப்பாக விளையாடிய அவர் டி20 தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இருப்பினும் அவர் டி20 போட்டிகளில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement