ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடந்த 2023-ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியிருந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாத சென்னை அணி இந்த ஆண்டு இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2005 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சி.எஸ்.கே அணியில் நிகழ் இருக்கும் அடுத்த மாற்றம் :
ஆனால் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை அணி எந்தவொரு முன்னேற்றத்தையும் காணாமல் தாங்கள் விளையாடியுள்ள 9 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை சென்னை அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டது.
இதன் காரணமாக எதிர்வரும் எஞ்சியுள்ள ஐந்து லீக் போட்டிகளில் சென்னை அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே இந்த ஆண்டு சென்னை அணியில் ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, அன்சுல் கம்போஜ், டேவால்டு பிரேவிஸ் என பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வேளையில் ஏப்ரல் 30-ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியிலும் ஒரு முக்கிய மாற்றம் நிகழும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சென்னை அணியில் இந்த ஆண்டு விளையாடி வரும் அனுபவ வீரரான தீபக் ஹூடா மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வன்ஷ் பேடி என்கிற இளம் அதிரடி ஆட்டக்காரர் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் ஏற்கனவே 43 வயதாகும் தோனி தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சென்னை அணியில் இடம் பெற்றுள்ள இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : முதல் ஐ.பி.எல் கேப்டனாக சுப்மன் கில் எடுத்த முடிவு.. கேப்டனாக மாறிய ரஷீத் கான் – விவரம் இதோ
இதன் காரணமாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது தீபக் ஹூடா வெளியேற்றப்பட்டு வன்ஷ் பேடி இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்கெட் கீப்பரான இவர் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்யக் கூடியவர் என்பதனால் இவருக்கு வாய்ப்பு அளித்து அவரது திறமையை பரிசோதிக்கலாம் என்று நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.