இந்தியாவை தோற்கடிகச்ச என்னோட பிளான் இது தான்.. கம்பேக் கொடுக்க விடமாட்டோம்.. எல்கர் பேட்டி

Dean Elgar Press
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக சென்சூரியன் நகரில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் தனி ஒருவனாக சதமடித்து 101 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே சுமாராக பந்து வீசிய இந்திய பவுலர்களை திறம்பட எதிர்கொண்டு முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.

- Advertisement -

லேட்டாகா அடிக்கும் பிளான்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக தம்முடைய கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் அனுபவ வீரர் டீன் எல்கர் சதமடித்து 185, மார்கோ யான்சென் 84* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதை தொடர்ந்து 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 131 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை மீண்டும் கோட்டை விட்டது.

அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக நன்ரே பர்கர் 4 விக்கெட்களை சாய்த்தார். இந்நிலையில் பந்தை தாமதமாக அடிப்பதே தம்முடைய திட்டமாக இருந்ததாக தெரிவிக்கும் டீன் எல்கர் இந்தியர்கள் தோற்கடிப்பதற்கு கடினமானவர்களாக இருந்ததாக கூறியுள்ளார். இது பற்றி ஆட்டநாயகன் விருது வென்ற பின் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஸ்பெஷல் இன்னிங்ஸ். சில நேரங்களில் வேலையாகாத எங்களுடைய திட்டங்களில் அசத்த விரும்புவோம். ஆனால் இன்றைய போட்டியில் எங்களுடைய திட்டங்கள் வேலை செய்தது. இப்போட்டி மிகவும் கடினமானதால் நீங்கள் திட்டத்தை எளிதாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக பந்தின் மீது கவனம் செலுத்தி நேராக அடிக்க வேண்டும். அதே சமயம் பந்தை தாமதமாக அடிப்பது மகத்தானதாக இருக்கும்”

இதையும் படிங்க: என்ன ஜோக் பண்றிங்களா? ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சியை கலாய்த்த ரவி சாஸ்திரி.. காரணம் என்ன

“டோனி, யான்சென் ஆகியோருடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். உங்களுடைய வேகம் மற்றும் சுழல் பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை எடுத்தால் தான் டெஸ்ட் போட்டியை வெல்ல முடியும். ரபாடா அபாரமாக செயல்பட்டார். ஆனால் பர்கர் தென்னாபிரிக்காவின் ஒளிவிளக்காக இருப்பதை காண்பித்தார். முதல் சில நாட்களில் மழையால் ஈரப்பதமான சூழ்நிலை இருந்தது. 2 போட்டிகளில் முதல் போட்டியிலேயே நீங்கள் தோற்றால் தொடரை வெல்ல முடியாது. இந்தியர்கள் தோற்கடிப்பதற்கு கடினமாக இருந்தார்கள். அடுத்த சில நாட்கள் ரிலாக்ஸ் செய்து மீண்டும் விளையாடுவோம்” என்று கூறினார்.

Advertisement