DC vs GT : குஜராத் அணியை வீழ்த்தி நாங்கள் பெற்ற இந்த அற்புதமான வெற்றிக்கு காரணம் இவங்க 2 பேர் தான் – வார்னர் மகிழ்ச்சி

David-Warner
- Advertisement -

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் இறுதி நேரத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த குஜராத் மற்றும் கடைசி இடத்தில் இருந்த டெல்லி அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

GT vs DC

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக அமான்கான் 51 ரன்கள், அக்சர் பட்டேல் 27 ரன்களையும், ரிப்பல் பட்டேல் 23 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியானது இந்த போட்டியில் டெல்லி அணியை எளிதாக வீழ்த்தி புள்ளி பட்டியலில் தங்களது முதலிடத்தை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அவ்வேளையில் துவக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணியானது 32 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ஒருபுறம் கேப்டன் ஹார்திக் பாண்டியா நிலைத்து நின்று விளையாட அவருடன் இணைந்த அபினவ் மனோகர் மற்றும் ராகுல் திவாத்தியா ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே இறுதியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிவரை ஹார்திக் பாண்டியா ஆட்டம் இழக்காமல் இருந்தாலும் அவருடன் சேர்ந்த பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முற்பட்டு விக்கெட்டுகளை இழந்ததால் கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.

Aman Khan

அப்போது அனுபவ வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி கடைசி ஓவரில் ஆறு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து டெல்லி அணியை பிரமாதமான வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் : இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

எங்களது பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தோம். முகமது ஷமி அற்புதமாக பந்துவீசி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருப்பினும் பின் வரிசையில் களமிறங்கிய அமான் கான் மற்றும் ரிப்பல் பட்டேல் ஆகியோர் விளையாடிய விதம் எங்களுக்கு நம்பிக்கையை தந்தது. அதோடு ஒரு டீசன்டான ஸ்கோரையும் அவர்கள் எங்களுக்காக வழங்கினர். அதன் பின்னர் பந்துவீச்சில் அடுத்தடுத்து நாங்கள் விக்கெட்டுகளை கைப்பற்றவே நல்ல நிலையில் வெற்றியை நோக்கி சென்றோம்.

இதையும் படிங்க : IPL 2023 : ஜெயிச்சுட்டோம்னு மகிழ்ச்சி வேண்டாம், பவுலிங் ரொம்ப வீக்கா இருக்கு – முக்கிய அணியை எச்சரித்த ராபின் உத்தப்பா

எங்களுடைய பேட்டிங் துறையில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நாங்கள் பாசிட்டிவாக விளையாட நினைத்தோம். இந்த போட்டியில் கலீல் அகமது மிகச் சிறப்பாக பந்து வீசினார். அதோடு இஷாந்த் சர்மா எப்பொழுதும் இளமையானவர் போன்றே மிக அருமையாக பந்து வீசினார். நோர்க்கியா எங்கள் அணியின் சிறப்பான டெத் பவுலர் இன்று அவரால் சிறப்பாக பந்து வீச முடியவில்லை என்றாலும் இஷாந்த் சர்மா அற்புதமாக வீசி எங்களுக்கு வெற்றியை பெற்று தந்தார் கூறியது என டேவிட் வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement