நீங்கள் எனக்கு அளித்த அன்புக்கு நன்றி. ரசிகர்களுக்கான மெசேஜ்ஜை கொடுத்து விடைபெற்ற – டேவிட் வார்னர்

Warner
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான டேவிட் வார்னர் கடந்த பல ஆண்டுகளாகவே சன்ரைசர்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவரின் தலைமையில் 2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் இந்த 2021 ஆம் ஆண்டின் சீசன் முழுவதும் அவருக்கு மோசமாக சென்றது. முதலில் ஆரம்ப கட்டத்தில் சில போட்டிகளில் சொதப்பிய அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அணியில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டார்.

இப்படி தொடர் சரிவை சந்தித்து இந்த தொடர் முழுவதுமே 8 போட்டிகளில் விளையாடி 185 ரன்களை மட்டுமே குவித்தார். இதன் காரணமாக அவர் கேப்டன் பதவியை இழந்தது மட்டுமின்றி அணியிலிருந்து வெளியேற்றப்பட்டதால் அடுத்த ஆண்டு ஏலத்திற்கு அவர் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த ஒரு வருடம் அவருக்கு மோசமான ஆண்டாக அமைந்தாலும் நிச்சயம் அடுத்த வருடம் அவர் வேறு அணியில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணி இறுதியில் சந்தித்த சில போட்டிகளை பார்வையாளர்கள் இடத்திலிருந்து ரசித்த அவர் கொடியசைத்து கைதட்டி தங்களது அணி வீரர்களுக்கு உற்சாக படுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் பிளே ஆப் சுற்றில் இடம் பெற்றுள்ள அணிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கின்றன. மற்ற வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த நாட்டிற்கு கிளம்பியுள்ளனர். இந்நிலையில் தற்போது சன் ரைசர்ஸ் அணியில் இருந்து விடைபெற்ற வார்னர் இந்த பயணம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார்.

- Advertisement -

அதில் அவர் குறிப்பிட்டதாவது : இனிமையான நினைவுகளை தந்ததற்கு நன்றி. ரசிகர்கள் அனைவரும் எனக்கு அளித்த ஆதரவும், எங்கள் அணிக்கு கொடுத்த ஊக்கமும் இதுவரை எங்களை விளையாட வைத்துள்ளது. நீங்கள் எங்களுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி சொன்னால் அது போதாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : குவாலிபயர் 1 : சி.எஸ்.கே அணியை எதிர்க்கவுள்ள டெல்லி அணியின் பிளேயிங் லெவன் இதோ – ஜெயிச்சிடுவாங்களோ ?

மேலும் நானும் எனது குடும்பமும் உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம் என ரசிகர்களுக்கான ஒரு பதிவை பதிவிட்டு நாடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலானது மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement