இவரை அணியில் சேர்த்ததும் வெற்றியை பெற்று கொடுத்துவிட்டார் – இந்திய வீரரை புகழ்ந்த வார்னர்

Warner
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

SRHvsDC

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வார்னர் 34 பந்துகளில் 66 ரன்களையும், சஹா 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்தனர். அதன் பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 19 ஓவர்களில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 36 ரன்களையும், ரஹானே 26 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக ரசித் கான் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக விருத்திமான் சஹா தேர்வானார்.

Saha 2

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் கூறுகையில் : இந்த போட்டிக்கு முன்பாக நாங்கள் குறைந்த இலக்கை துரத்தும்போது தோற்று ஏமாற்றம் அடைந்தோம். இந்நிலையில் இன்றைய போட்டியில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு பந்துவீச்சாளர்களான ரபாடா, நோர்க்கியா ஆகியோருக்கு எதிராக அதிரடி காட்ட விரும்பினோம். நான் 2009ஆம் ஆண்டு ஆடியதுபோல தற்போது அதிரடியாக விளையாட முயற்சித்தேன்.

Saha

முன் காலை நகர்த்தி ஆடியதால் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது. இந்த போட்டியில் பேர்ஸ்டோவை நீக்கியது கடினமான முடிவு என்றாலும் சஹா சிறப்பாக விளையாடி அந்த இடத்தை நிரப்பிவிட்டார். பவர்பிளே ஓவர்களில் அவர் ஆடியவிதம் சிறப்பாக இருந்தது. இன்னும் சில போட்டிகள் ஷார்ஜாவில் இருப்பதால் இனியும் இந்த அதிரடியை நீங்கள் பார்க்கலாம் என்று வெற்றி குறித்து அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement