பயிற்சியின் இடையே சி.எஸ்.கே அணி வீரர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய தோனி – எதற்கு தெரியுமா?

Dhoni
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல் இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது சீசனானது இன்னும் இரு வாரங்களில் துவங்க உள்ளது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் மும்முரமாக தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்ச் 22-ஆம் தேதி நடைபெறயிருக்கும் முதல் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இதன் காரணமாக முன்கூட்டியே சேப்பாக்கம் வந்தடைந்த சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த பயிற்சி முகாமானது மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைபெற்று வரும் வேளையில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர்.

அதோடு அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்டன் தோனியும் அந்த நிகழ்ச்சியை முடித்த கையோடு சென்னை வந்தடைந்து சி.எஸ்.கே வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த பயிற்சி முகாமிற்கு மத்தியில் சிஎஸ்கே வீரர்களுடன் இணைந்து அவர் கேக் வெட்டி கொண்டாடிய விடயம் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. அந்த வகையில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு ஆலோசகரான எரிக் சைமன்சின் பிறந்தநாளை ஒட்டி சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024 : ரிஷப் பண்ட்டுக்கு என்சிஏ காட்டிய பச்சைக்கொடி.. கேப்டன், கீப்பராக விளையாடுவாரா? வெளியான தகவல்

அப்போது தோனி அவருக்கு கேக் ஊட்டி வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தார். ஐபிஎல் தொடரில் தோனிக்கு இதுவே கடைசி சீசனாக இருக்கும் என்று பார்க்கப்படும் வேளையில் இம்முறையும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தோடு தோனியின் வழியனுப்ப நடப்பு சாம்பியனான சென்னை அணி தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement