சென்னை அணி இந்த 3 மாற்றங்களை செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் – வல்லுநர்கள் கூறுவது என்ன?

CSK
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் ரசிகர்களின் மத்தியில் பெரிய ஆதரவைப் பெற்று ஆண்டுதோறும் பலமாக விளையாடி வரும் அணியாக சிஎஸ்கே அணி திகழ்கிறது. இதுவரை ஒரு முறை மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாத சிஎஸ்கே அணி மற்றபடி தாங்கள் விளையாடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மட்டுமின்றி நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. அதோடு கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை வீழ்த்தி நடப்பு சாம்பினாகவும் திகழ்ந்து வருகிறது.

CSK-1

- Advertisement -

இந்நிலையில் இந்த 15-வது ஐபிஎல் தொடரானது முழுவதுமாக இந்தியாவில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்த வேளையில் சென்னை அணிக்கு இந்த சீசனிலும் ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் நடப்பு சாம்பியனான இவர்கள் வெற்றியுடன் இந்த சீசனை துவங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் 2 போட்டிகளிலுமே சென்னை தோல்வியை தழுவியது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து இனி வரும் போட்டிகளில் நிச்சயம் சிஎஸ்கே அணி சில மாற்றங்களை செய்து விரைவில் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் நிபுணர்கள் சிலர் சிஎஸ்கே அணியில் செய்ய வேண்டிய மிக முக்கியமான மூன்று மாற்றங்கள் குறித்து பேசியுள்ளனர்.

Bravo

அந்த வகையில் தற்போது தீபக் சாஹர் அணியில் இல்லாததால் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் விளையாடி வருகின்றனர். அதன்படி இளம் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்தலாம் என்று ஒரு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அதே போன்று இரண்டாவது மாற்றமாக துஷார் பாண்டேவிற்கு பதிலாக 19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பையில் சிறப்பாக விளையாடிய ராஜவர்தன் ஹாங்கரேக்கரை இணைக்கலாம் என்று கூறியுள்ளனர்.

- Advertisement -

ஏனெனில் வேகப்பந்து வீச்சாளரான ராஜ்வர்தன் ஹாங்கரேக்கர் பேட்டிங்கிலும் அசத்த கூடியவர் இதன் காரணமாக அவரை அணிக்குள் கொண்டுவரலாம் என்று கூறியுள்ளனர். அதே போன்று மூன்றாவது மாற்றமாக வீரரை மாற்றாமல் தோனியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : இனி இந்திய வீரரை நம்பி பயனில்லை. வெளிநாட்டு வீரரை டீமுக்குள் கொண்டு வந்த – ரவீந்திர ஜடேஜா

ஏனெனில் நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகளிலும் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளதால் நிச்சயம் அவர் கீழ் வரிசையில் இறங்காமல் 4-வது வீரராக வந்து களமிறங்கும் பட்சத்தில் அவரால் பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல முடியும். இந்த மூன்று மாற்றங்களை சென்னை அணி செய்தாக வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Advertisement