தோனி கரெக்ட்டா யூஸ் பண்ணுவாரு.. கமின்ஸ்க்கு நிகரான அவரை சிஎஸ்கே வாங்கனும்.. ரெய்னா கோரிக்கை

Suresh Raina
- Advertisement -

2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 10 அணிகளில் காலியாக உள்ள வெறும் 77 இடங்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து 333 வீரர்கள் இந்த ஏலத்தில் போட்டியிட உள்ளனர். அவர்களில் தரமான வீரர்களை வாங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக 5 கோப்பைகளை வென்று நடப்பு சாம்பியனாகவும் வெற்றிகரமான அணியாகவும் ஜொலிக்கும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஓய்வு பெற்ற ராயுடுவுக்கு பதிலாக யாரை வாங்கும் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸை கழற்றி விட்ட சென்னை அந்த இடத்தை நிரப்புவதற்கு தகுந்த ஆல் ரவுண்டரை வாங்குவதற்கு போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ரெய்னா கணிப்பு:
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸ் போல செயல்படும் திறமையை கொண்ட இந்தியாவின் ஆல் ரவுண்டர் சர்துள் தாக்கூரை சென்னை வாங்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மற்றும் சின்ன தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். குறிப்பாக கடந்த வருடம் கொல்கத்தாவில் சுமாராக செயல்பட்டாலும் அவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தோனிக்கும் நன்றாக தெரியும் என்பதால் இம்முறை சென்னை வாங்கும் என்று நம்புவதாகவும் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “ஏறத்தாழ பட் கமின்ஸ் போல செயல்படக்கூடிய அவர் பேட்டிங் மற்றும் பவுலிங் துறைகளில் அசத்துவார். அவரை கொல்கத்தா சரியாக பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் சென்னைக்காக விளையாடிய போது அவர் சிறப்பாக விளையாடியுள்ளார்”

- Advertisement -

“குறிப்பாக சென்னை அணிக்காக பழைய பந்திலும் புதிய பந்திலும் அவர் தரமான பவுலிங்கை வெளிப்படுத்தியுள்ளார். மறுபுறம் தீபக் சஹர், பதிரனா ஆகியோர் அடிக்கடி காயத்தை சந்திப்பவர்களாக இருக்கின்றனர். தாக்கூர் சென்னை அணி நிர்வாகத்தை நன்றாக புரிந்து கொண்டவர். இதற்கு முன் அவரை எம்எஸ் தோனி மிகவும் சிறப்பாக பயன்படுத்தி வந்தார். அதனால் அவரை இம்முறை வாங்குவது முக்கியம் என்று கருதுகிறேன்”

இதையும் படிங்க: 2 ஆவது போட்டியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல். அவரது இடத்தை நிரப்ப காத்திருக்கும் 2 வீரர்கள் – வாய்ப்பு யாருக்கு?

“தற்போது இந்திய அணியிலும் முக்கிய பவுலராக இருக்கும் அவருடைய ஃபார்ம் முக்கியமாகும்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2018 முதல் 2021 வரை சென்னைக்காக விளையாடிய தாக்கூர் ஆல் ரவுண்டராக செயல்பட்டு 2 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதனாலயே இந்தியாவுக்காகவும் அறிமுகமான அவர் ரசிகர்களால் லார்ட் என கொண்டாடப்படுகிறார். அப்படிப்பட்ட அவரை மீண்டும் சென்னை வாங்கினால் அது நல்ல முடிவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement