2 ஆவது போட்டியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல். அவரது இடத்தை நிரப்ப காத்திருக்கும் 2 வீரர்கள் – வாய்ப்பு யாருக்கு?

Shreyas-Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்திய இந்திய அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையான இரண்டாவது போட்டி நாளை டிசம்பர் 19-ஆம் தேதி செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக விளையாட அறிமுக வாய்ப்பினை பெற இரண்டு வீரர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

ஏனெனில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பிடித்துள்ளதால் அதற்கு தயாராகும் வகையில் எஞ்சியுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்தும் அவர் வெளியேறி உள்ளார்.

இதன் காரணமாக நாளைய போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தை யாராவது ஒருவர் நிரப்பியாக வேண்டும். அந்த வகையில் ரஜத் பட்டிதார் மற்றும் ரிங்கு சிங் ஆகிய இருவரும் அந்த இடத்திற்காக போட்டியிட காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இருப்பினும் நான்காவது இடத்தை சரியாக நிரப்ப வேண்டுமெனில் ரஜத் பட்டிதார் தான் அந்த இடத்தை நிரப்புவார் என்று தெரிகிறது. ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டிலும், ஐபிஎல் தொடரிலும் அவர் நான்காவது இடத்திலேயே சிறப்பாக விளையாடி வருவதால் அவர் இந்திய அணிக்காகவும் அந்த இடத்தில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : நாளைய 2 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் – புதுமுக வீரருக்கு அறிமுக வாய்ப்பு

அதேவேளையில் கே.எல் ராகுல் நான்காவது இடத்தில் விளையாடும் பட்சத்தில் பினிஷர் ரோலில் ஆறாவது இடத்தில் ரிங்கு சிங் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது. இப்படி ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தில் நாளைய போட்டியில் இவர்கள் இருவரில் ஒருவருக்கு நிச்சயம் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி.

Advertisement