கடந்த சில போட்டிகளாகவே அணியில் இடம்பெறாத சி.எஸ்.கே இளம்வீரர் – அவரை ஏன் சேக்கல (ரசிகர்கள் கேள்வி)

CSK
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரின் முதல் 8 போட்டிகளில் ஜடேஜா தலைமையில் பங்கேற்ற சென்னை அணியானது இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதன் காரணமாக வெறும் 4 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் இருந்த சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. அதோடு இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு என்ற அழுத்தத்தில் சென்னை அணி விளையாடி வருகிறது.

CSK vs SRH

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம் செலுத்தப் போவதாக கூறி ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து விலகியிருந்தார். இதன் காரணமாக மீண்டும் தோனி அணிக்கு கேப்டனாக திரும்பினார். அதன்படி நடைபெற்று முடிந்த சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணியானது தற்போது பெங்களூர் அணியுடன் மோதி வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இளம் வீரரான ஷிவம் துபே கடந்த சில போட்டிகளாகவே அணியில் விளையாடாதது சி.எஸ்.கே ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Shivam Dube Robin Uthappa

ஏனெனில் துவக்கத்தில் அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தாலும் தடுமாறினாலும் மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துபே தனது அற்புதமான செயல்பாட்டினை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

அதற்கான காரணமும் தெளிவாக தெரியவில்லை என்பதன் காரணமாக தற்போது ரசிகர்கள் ஷிவம் துபேவுக்கு என்ன ஆச்சு? அவரை ஏன் அணியில் சேர்க்கவில்லை? என்பது போன்ற கேள்விகளை சமூக வலைதளம் மூலமாக வெளிப்படுத்தி தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : அமர்க்கள ஆரம்பம் அதன்பின் சொதப்பல்! ஐபிஎல் 2022 தொடரில் நல்ல தொடக்கம் பெற்று சொதப்பிய 5 வீரர்கள்

பொதுவாகவே சென்னை அணியில் பெரிதாக மாற்றம் இருக்காது என்று பேசப்பட்டு வரும் வேளையில் தொடர்ச்சியாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது என்றே கூறலாம்.

Advertisement