இது எங்க தன்மான பிரச்சனை. நீங்களும் பொல்லார்டு மாதிரி ரிட்டயர்டு ஆயிடுங்க – சி.எஸ்.கே ரசிகர்கள் கோரிக்கை

CSK-Fans
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக 2023-ஆம் ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அடுத்த சீசனுக்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலமானது டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக நவம்பர் 15-ஆம் தேதிக்குள் தற்போது உள்ள 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் நேற்று அனைத்து அணிகளுமே தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

Bravo

- Advertisement -

இதன்காரணமாக பல்வேறு அணிகளை சேர்ந்த பல முன்னணி வீரர்கள் மோசமான ஃபார்ம் காரணமாக கழட்டி விடப்பட்டனர். அந்த வகையில் மும்பை அணி கடந்த பல ஆண்டுகளாகவே அவர்களது அணியின் முக்கிய வீரராக தக்கவைத்த கைரன் பொல்லார்டை வெளியேற்றியது. ஆனால் மும்பை அணியை தவிர வேறு எந்த அணிக்காகவும் தான் விளையாட விரும்பவில்லை என்று கூறி அந்த அணியின் முன்னணி வீரரான கைரன் பொல்லார்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து அவர் மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொல்லார்டு எவ்வாறு மும்பை அணிக்காக மட்டுமே தான் விளையாடுவேன் என்று கூறி ஐபிஎல்-லில் வேறு அணிக்காக என்னால் விளையாட முடியாது என்று தனது ஓய்வை அறிவித்தாரோ அதேபோன்று சென்னை அணியை சேர்ந்த டுவையின் பிராவோவும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஒரு வினோதமான கருத்தினை கோரிக்கையாக முன்வைத்து வருகின்றனர்.

Bravo

ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே தோனியின் நம்பிக்கையை பெற்று தொடர்ச்சியாக சென்னை அணியில் முக்கிய வீரராக தக்கவைக்கப்பட்டு அணியில் விளையாடி வந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு வயது மூப்பு காரணமாகவும், சற்று மோசமான ஃபார்ம் காரணமாகவும் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் வேறொரு அணிக்காகவும் விளையாட வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

இவ்வேளையில் பொல்லார்டு மாதிரி நீங்களும் (சென்னை) ஒரே அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி உள்ளதால் அதே எண்ணத்தை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவிக்க வேண்டும். இது எங்கள் தன்மான பிரச்சனை சென்னை அணிக்காகவே மட்டுமே விளையாடுவேன் என்று கூறி ஐபிஎல் தொடரிலிருந்து பிராவோ ஓய்வு பெற வேண்டும். சென்னை அணியை தவிர்த்து அவர் வேறு எங்கும் விளையாடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ரசிகர்கள் வினோதமான கோரிக்கையை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பேரு மட்டும் தான் சி.எஸ்.கே, ஆனா நம்ம பசங்க யாரும் டீம்ல இல்ல – ரசிகர்கள் ஆதங்கம்

அதே வேளையில் பிராவோ தற்காலிகமாக சி.எஸ்.கே அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் அவர் குறைந்த தொகைக்கு மீண்டும் சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்படுவார் என்று சில தகவல்களும் இணையத்தில் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement