ராயுடுவின் ரிட்டையர்மென்ட் பதிவு நீங்கதான் போட்டீங்களா? – சீனியர் வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

Rayudu
- Advertisement -

சென்னை அணியின் முன்னணி நட்சத்திர வீரரான அம்பத்தி ராயுடு இந்த ஐ.பி.எல் தொடருக்கு பின்னர் ஓய்வு பெறுவதாக அவர் பதிவிட்ட ஒரு ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று காலையிலிருந்தே அதிக அளவில் பேசப்பட்டு வரும் விடயமாக மாறிய ராயுடுவின் ஓய்வு விவகாரம் விரைவிலேயே முடிவுக்கு வந்தது. அதன்படி சென்னை அணியின் தலைமை நிர்வாகி காசிவிஸ்வநாதன் தெரிவிக்கையில் :

- Advertisement -

ராயுடு சென்னை அணியில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றும் அவர் தொடர்ச்சியாக விளையாடுவார் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அம்பத்தி ராயுடு இப்படி ஓய்வு குறித்த பதிவை வெளியிட்டு உடனடியாக நீக்க என்ன காரணம் என்பது குறித்த பல சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் ரசிகர்கள் சிலர் இந்த ஓய்வு விவகாரத்தை பிராவோவுடன் சம்பந்தப்படுத்தி சில சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில் பிராவோ தனது ட்விட்டர் பக்கத்தில் போட வேண்டிய கருத்தை தவறுதலாக ராயுடுவின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாக கிண்டலடித்து உள்ளனர்.

ஆனால் ராயுடு இன்னும் இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை. அதனால் இது தற்செயலாக நடைபெற்றதா? அல்லது அவரது ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு விட்டதா என்று தெரியவில்லை. ஆனாலும் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : ஐபிஎல் தொடரில் 13 ஆண்டுகளாக விளையாடி விட்டேன். இரண்டு மாபெரும் அணியுடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சி. இந்த தொடருடன் ஓய்வு பெறுவதாக அவர் பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

ஆனாலும் அந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே மீண்டும் டெலிட் செய்யப்பட்டதால் இது எப்படி ஏற்பட்டது என்பது குறித்த குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனாலும் முப்பத்தி ஆறு வயதான அம்பத்தி ராயுடு இன்னும் சில ஆண்டுகள் சென்னை அணிக்காக விளையாட விருப்பமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த – டாப் 4 சரவெடி பேட்ஸ்மேன்கள்

கடந்த 2010 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான அம்பத்தி ராயுடு இதுவரை 187 போட்டிகளில் விளையாடி 4187 ரன்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement